எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை, காவல்துறையை ஏவி கைது செய்த ஆளும் தவெக அரசின் ஜனநாயக படுகொலையை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வன்மையாகக் கண்டித்துள்ளார்.

தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் டெல்டா விவசாயிகளை கண்ணீர் சிந்த வைத்து, மேகதாது அணை கட்டுவதை தடுக்க திராணியற்று, தமிழ்நாட்டிற்கு தீங்கு இழைப்போரை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசாத முதலமைச்சரை, விவசாய சங்கங்களுடன் இணைந்து கண்டித்த நம் எதிர்க்கட்சித் தலைவரை, தனிப்பட்ட முறையில் பழிவாங்குவதற்காக கைது நடவடிக்கையை  ஆளும் தவெக அரசு மேற்கொண்டுள்ளதாக கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், தற்போதைய முதலமைச்சர் மற்றும் ஆளும் தவெக அரசின் கையாலாகாத தனம் குறித்து கேள்வி எழுப்பக்கூடும் என்பதை நினைத்து, அச்சத்தின் மிகுதியால் உள்ள அரசின் உச்சபட்ச கோழைத்தனம் இது என விமர்சித்துள்ளார்.

ஆட்சி அமைந்தது முதல் இன்று வரை மக்கள் நலனுக்காகவும், மாநிலத்தின் நலனுக்காகவும் எந்த நடவடிக்கையும் எடுக்காத முதலமைச்சரின்  ஆணவம் மிகுந்த அதிகார மமதைக்கு நம் தமிழ்நாட்டு மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள் எனச் சாடியுள்ள கே.என்.நேரு,

நிர்வாக திறன் ஏதுமின்றி  பாசிசத்தை கையில் எடுத்துள்ள ரீல்ஸ் அரசான தவெக அரசின் இந்த நடவடிக்கையால் நம் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களையும், நம் கழகத்தையும் ஒருபோதும் அச்சுறுத்த முடியாது எனக் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version