தியாகிகள் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், தியாகிகளின் உயர்ந்த பண்புகளை வாழ்வியல் நெறியாக ஏற்று புதிய சமுதாயத்தை படைத்திடுவோம் எனக் கூறியுள்ளார்.

முதலமைச்சரின் எக்ஸ் தளப் பக்கத்தில், இந்திய விடுதலைக்கும், மக்களின் உரிமை வாழ்விற்கும் தங்களது இன்னுயிரை ஈந்த தியாகி ஆர்யா () பாஷ்யம், தியாகி சங்கரலிங்கனார் மற்றும் தியாகி செண்பகராமன் ஆகியோருக்கு தியாகிகள் தினத்தை முன்னிட்டு தனது வீரவணக்கங்களைப் பதிவு செய்துள்ளார்.

ஆங்கிலேயரின் அதிகாரச் செருக்கை வேரறுக்கும் வகையில், சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக் கொத்தளத்தில் பறந்த பிரிட்டிஷ் யூனியன் ஜாக் கொடியை இறக்கிவிட்டு, இந்திய மூவர்ணக் கொடியை ஏற்றிய மாவீரர் தியாகி ஆர்யா () பாஷ்யம்,

நமது மாநிலத்திற்குதமிழ்நாடுஎன்ற பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகத் தொடர் உண்ணாவிரதமிருந்து இன்னுயிரை ஈந்த தியாகி சங்கரலிங்கனார்,

ஜெய் ஹிந்த்என்ற முழக்கத்தை சுதந்திரப் போராட்டத்திற்கு அளித்து, இந்திய விடுதலைக்காக சர்வதேச ஆதரவைத் திரட்டிய, வீரத்தியாகி செண்பகராமன் ஆகியோரின் அயராத உழைப்பும் தன்னலமற்ற தியாகமும் என்றென்றும் போற்றத்தக்கது எனக் கூறியுள்ள முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்,

இத்தகைய தியாகிகளின் உயரிய பண்புகளை வாழ்வியல் நெறியாக ஏற்று, மனிதநேயமும் நாட்டுப்பற்றும் கொண்ட புதிய சமுதாயத்தை உருவாக்கிடுவோம் என உறுதி தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version