காவிரி நடுவர் மன்றம் தீர்புப்படி கர்நாடக அரசு ஜூன் ஜூலை மாதத்திற்கான தண்ணீரை வழங்கவில்லை எனவும் இதனை மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதாகவும் சிறுபான்மை துறை அமைச்சர் ஷாஜஹான் குற்றம்சாட்டியுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம் பொது நூலகத்துறை, சமூக நீதித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் ரூ 3 கோடி மதிப்பீட்டில் பொது நூலகம், வகுப்பறை கட்டிடம் உள்ளிட்ட 6 புதிய கட்டிடங்கள் திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகளை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “காவிரி நடுவர் மன்றம் தீர்புப்படி கர்நாடக அரசு ஜூன், ஜூலை மாதத்திற்கான தண்ணீரை வழங்கவில்லை. இதை ஒன்றிய அரசு வேடிக்கை பார்கிறது. இதனால் விவசாயிகள் தமிழக விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டு இருப்பதாகவும்” குற்றம் சாட்டினார்.
மேலும், “டெல்டா மாவட்டங்களில் மும்முனை மின்சார தட்டுப்பாட்டை போக்க விவசாயத்துக்காக 400 மெகா வாட் மின் உற்பத்தி துணை மின் நிலையம் அமைக்கப்படும்”எனத் தெரிவித்தார்.
