போதையில் இருந்து இளைஞர்களை திசை திருப்பும் வகையில் தமிழக அரசு விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் *ஸ்டார்ட் ரன் ஸ்டாப் டிரக்ஸ்* எனும் வாசகத்தை முன்னிறுத்தி மாரத்தான் ஓட்டம் தமிழ் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்ற இந்த மாரத்தான் கொட்ட போட்டியை ஆட்சியர் சினேகா துவக்கி வைத்தார். இதில் 700 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இளைஞர்கள் என பல தரப்பினரும் பங்கேற்று நிறைவு செய்தனர்.

பங்கேற்றுவதற்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி அண்ணா காவல் அரங்கத்தில் நடைபெற்றது இதில் அமைச்சர் தென்னரசு மாவட்ட ஆட்சியர் சினேகா கலந்து கொண்ட வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கினர்.

அப்போது எதிர்பாராத விதமாக பெண்ணுறுவர் பெரியவர் என அமைச்சர் மற்றும் ஆட்சியர் காலில் விழுந்தபோது அலறியடித்தவாறு இருவரும் விலகி இது ஒருபோதும் செய்யக்கூடாது என்ற அனைவருக்கும் பொதுவாக அறிவுரை கூறினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version