Close Menu
    What's Hot

    தமிழ்நாட்டில் தாக்கம் செலுத்துமா “ஆபரேஷன் டூஃபான்”? விஜய்க்கு கேரள முதல்வர் முக்கிய கடிதம்..!!

    அமோனியா கசிவால் உயிரிழந்த 10 பெண்கள்; நடவடிக்கை குறித்து நல்வாழ்வுத்துறை அறிக்கை

    மீண்டும் ஒன்றிணைந்த குடும்பம்..!! தந்தை ராமதாஸை சந்தித்தார் மகன் அன்புமணி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»இடி, மின்னலுடன்.. மும்பையில் தீவிரமடைந்த பருவமழை..!! ரெட் அலர்ட் அறிவிப்பு..!!
    Featured

    இடி, மின்னலுடன்.. மும்பையில் தீவிரமடைந்த பருவமழை..!! ரெட் அலர்ட் அறிவிப்பு..!!

    editor5By editor5June 24, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 12 8
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இடி, மின்னலுடன் கூடிய தீவிர மழை பெய்யும். மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

    மும்பையில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ரெட் அலர்ட் அறிவித்துள்ளது. அரபிக்கடலின் மத்திய பகுதியில் இருந்து தொடங்கிய வலுவான மழை மும்பை உள்ளிட்ட மராட்டியத்தின் பல்வேறு மாவட்டங்கள், தெலுங்கானா, ஒடிசா, சத்தீஷ்கார், ஜார்கண்ட் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

    வழக்கமாக ஜூன் 10-ம் தேதி தொடங்க வேண்டிய பருவமழை இந்த ஆண்டு கணிசமாக தாமதமாகியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, 2023-ம் ஆண்டும் ஜூன் 25-ம் தேதி மழை தொடங்கியது. வரலாற்றில் மிகவும் தாமதமான ஆண்டுகளில் 1958 மற்றும் 1974-ல் ஜூன் 28-ம் தேதி பருவமழை பெய்யத் தொடங்கியதாக பதிவாகியுள்ளது. இந்த முறை 13 நாட்கள் தாமதத்துக்குப் பின், நேற்று இரவு மும்பையில் பருவமழை வெளுத்து வாங்கியது. கனமழை காரணமாக நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து சிரமத்தை ஏற்படுத்தியது.

    இன்று மும்பை மற்றும் அருகிலுள்ள பால்கர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இடி, மின்னலுடன் கூடிய தீவிர மழை பெய்யும் என்றும், மணிக்கு 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தானே மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட், ராய்காட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அத்தியாவசிய பயணங்களைத் தவிர்க்கவும், பாதுகாப்புடன் இருக்கவும் மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மும்பையில் மழை தொடர்ந்து வருகிறது. மூன்றாவது நாளாக நேற்று காலை 7 மணியளவில் தொடங்கிய மழை இடைவிடாமல் பெய்தது. பல இடங்களில் ஒரு மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்த மழையால் சாலைகளில் நீர் தேங்கியது. எனினும், ஏரிகளின் நீர் மட்டம் இன்னும் குறைவாகவே உள்ளது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் வெறும் 8.07 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இது நகரின் குடிநீர் பிரச்னையை இன்னும் நீடிக்கச் செய்யும் என அஞ்சப்படுகிறது.

    போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தபடி, நேற்று ரெயில் மற்றும் சாலைப் போக்குவரத்தில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. பெஸ்ட் பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. இருப்பினும், வரும் நாட்களில் மழை தீவிரமடையும் என்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

    monsoon rain Mumbai red alert
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசீமான் போராட்டத்திற்கு கிடைச்சாச்சு பதில்..!! அரசு பேருந்துகளில் மீண்டும் ‘தமிழ்நாடு’ பெயர்..!!
    Next Article அமைதி ஒப்பந்தம் போட்டாலும் ஆபத்து குறையல!. இந்தியர்களுக்கு எச்சரிக்கை!
    editor5

    Related Posts

    தமிழ்நாட்டில் தாக்கம் செலுத்துமா “ஆபரேஷன் டூஃபான்”? விஜய்க்கு கேரள முதல்வர் முக்கிய கடிதம்..!!

    June 24, 2026

    அமோனியா கசிவால் உயிரிழந்த 10 பெண்கள்; நடவடிக்கை குறித்து நல்வாழ்வுத்துறை அறிக்கை

    June 24, 2026

    மீண்டும் ஒன்றிணைந்த குடும்பம்..!! தந்தை ராமதாஸை சந்தித்தார் மகன் அன்புமணி..!!

    June 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழ்நாட்டில் தாக்கம் செலுத்துமா “ஆபரேஷன் டூஃபான்”? விஜய்க்கு கேரள முதல்வர் முக்கிய கடிதம்..!!

    அமோனியா கசிவால் உயிரிழந்த 10 பெண்கள்; நடவடிக்கை குறித்து நல்வாழ்வுத்துறை அறிக்கை

    மீண்டும் ஒன்றிணைந்த குடும்பம்..!! தந்தை ராமதாஸை சந்தித்தார் மகன் அன்புமணி..!!

    குப்பைக் கழிவுகளை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன? சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு!

    முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து – ரஜினி சொன்ன பதில்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.