அடுத்தது திராவிடம் மாடல் ஆட்சி 2.0 தா. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் முதலமைச்சராக வருவார். முருகனை நம்பியவர்கள் கைவிடப்பட மாட்டார்கள் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய கோவிலுக்கு அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். அவர்களுக்கு கோவில் திரி சுதந்திரர்கள் சார்பில் பூரண கும்ப மரியாதை மற்றும் 5 அடி வேல் கொடுத்து வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து மூலவர், சண்முகர், சத்ரு சம்கார மூர்த்தி, பெருமாள் வள்ளி தெய்வானை ஆகிய சன்னதிகளில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு பேசினார்.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ரூ. 400 கோடி மதிப்பில் மெகா திட்ட பணிகள் செய்யப்பட்டுள்ளது. ஐந்து படை வீடுகளில் உள்ள தெய்வங்களை திருச்செந்தூர் முருகன் கோவிலில் பிரதிஷ்டை செய்துள்ளோம். இதனால் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்தால் ஐந்து படை வீடுகளிலும் தரிசனம் செய்து விடலாம்.

திமுக ஆட்சியில் 4602 கோவில்களுக்கு குடமுழுக்கு செய்துள்ளோம்.166 முருகன் கோவில்களுக்கு திருப்பணிகள் செய்துள்ளோம்.

பழனியில் முருகருக்கு மாநாடு நடத்தியுள்ளோம்.  முருகருக்கு மாநாடு நடத்திய ஒரே ஆட்சி திராவிட மாடல் ஆட்சி தான். இரண்டு நாட்கள் நடைபெற்ற அந்த மாநாட்டில் 27 நாடுகளைச் சேர்ந்த முருக பக்தர்கள், அறிஞர்கள் கலந்து கொண்டனர். அங்கு முருகனை நேரடியாக காண்பிக்கும் வகையில் 3டி அமைக்கப்பட்டது. இதனை 10 லட்சம் பேர் பார்த்துள்ளனர். முருகனுக்கு சிறப்பு சேர்க்கின்ற ஆட்சி, இந்த திமுக ஆட்சிதான். தமிழ் கடவுள் முருகன் எல்லா விதத்திலும் திராவிட மாடல் ஆட்சிக்கு பக்கபலமாக உள்ளார்.

இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version