Close Menu
    What's Hot

    வெளியான ஜனநாயகன்….. காலியான தலைமைச் செயலகம்!

    ஜாமீன் கோரி திமுக எம்.எல்.ஏ மனு… 27ஆம் தேதி விசாரணை – பதில் அளிக்க காவல் துறைக்கு உத்தரவு!

    “அதிகார அடக்குமுறைக்கு எதிரான குரல்”: மாணவர்கள் போராட்டத்துக்கு மாரி செல்வராஜ் ஆதரவு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மாணவர்கள் நலனில் சமரசமா? வாய்ப்பே இல்ல..!! நயினார் நாகேந்திரன் உறுதி..!!
    Featured

    மாணவர்கள் நலனில் சமரசமா? வாய்ப்பே இல்ல..!! நயினார் நாகேந்திரன் உறுதி..!!

    editor5By editor5July 23, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 21 12
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் நேற்று 33வது நாளை எட்டியுள்ளது. போராட்டக்காரர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களிடமிருந்து ஆதரவு பெருகி வருகிறது.

    கடந்த 20ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி நடத்திய பேரணி பெரும் வன்முறையில் முடிவடைந்தது. போலீஸார் நடத்திய தடியடியில் பல இளைஞர்கள் காயமடைந்தனர். இருப்பினும், ஜந்தர் மந்தரில் தொடரும் போராட்ட மைதானத்தில் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டம் பாஜகவுக்கு பெரும் சவாலாக அமைந்தது. நாடு முழுவதும் மாணவர் அமைப்புகள் இந்த விவகாரத்தில் தங்களது எதிர்ப்பை பல்வேறு முறையில் பதிவு செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் முக்கியப் பதிவொன்றை வெளியிட்டார். “இளைஞர்களின் நலனும் எதிர்காலமும் மிக முக்கியம். மாணவர்களின் நலனைப் பாதுகாக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்று குறிப்பிட்ட அவர், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விரைவு நீதிமன்றம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். குற்றமிழைத்த அனைவருக்கும் கடும் தண்டனை உறுதி செய்யப்படும் என்றும், தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பிரதமரின் இந்தப் பதிவை வரவேற்று, “மாணவர்கள் நலனில் எந்தச் சமரசமும் கிடையாது. குற்றவாளிகள் யாரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது” என்றார். மேலும், அடுத்த ஆண்டு முதல் அனைத்து தேர்வுகளும் முழுமையாக கணினி அடிப்படையிலான (CBT) முறையில் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். எனினும், எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு பயன்படுத்தி கலவரத்தைத் தூண்ட முயல்வதாக பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இளைஞர் சக்தியை தவறான பாதையில் செலுத்தக் கூடாது என்று எச்சரித்த நயினார் நாகேந்திரன், அனைத்து கட்சிகளும் அரசியல் பேதங்களைத் தாண்டி மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தப் போராட்டம் நாடு முழுவதும் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    Nainar Nagendran NEET
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅடுத்த லாக்-அப் மரணம்?. போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் உயிரிழப்பு!. உறவினர்கள் போராட்டம்!
    Next Article மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் புதுச்சேரி வருகை திடீர் ரத்து..!! காரணம் இதுதானாம்..!!
    editor5

    Related Posts

    வெளியான ஜனநாயகன்….. காலியான தலைமைச் செயலகம்!

    July 23, 2026

    ஜாமீன் கோரி திமுக எம்.எல்.ஏ மனு… 27ஆம் தேதி விசாரணை – பதில் அளிக்க காவல் துறைக்கு உத்தரவு!

    July 23, 2026

    “அதிகார அடக்குமுறைக்கு எதிரான குரல்”: மாணவர்கள் போராட்டத்துக்கு மாரி செல்வராஜ் ஆதரவு

    July 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வெளியான ஜனநாயகன்….. காலியான தலைமைச் செயலகம்!

    ஜாமீன் கோரி திமுக எம்.எல்.ஏ மனு… 27ஆம் தேதி விசாரணை – பதில் அளிக்க காவல் துறைக்கு உத்தரவு!

    “அதிகார அடக்குமுறைக்கு எதிரான குரல்”: மாணவர்கள் போராட்டத்துக்கு மாரி செல்வராஜ் ஆதரவு

    தாய்லாந்தில் பயங்கரவாதத் தாக்குதல்..!! துப்பாக்கிச் சூட்டில் 5 வீரர்கள் பரிதாப பலி..!!

    மக்கள் திண்டாட்டம் … செல்ஃபி எடுத்து அமைச்சர் கொண்டாட்டம் –  புதிய Nero அரசுக்கு எடப்பாடி கண்டனம்!  

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.