கடந்த மே 3ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வு நாடு தழுவிய அளவில் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட தேர்வு கட்டணத்தை மீண்டும் அவர்களின் வங்கிக் கணக்கிற்கே திருப்பியளிக்க  தேசிய தேர்வு முகமை (NTA) அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஜூன் 21ம் தேதி நடைபெற உள்ள மறுதேர்வுக்கு மாணவர்கள் தனியாக எந்தவொரு கூடுதல் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என்றும் NTA ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது.

கட்டணத்தை திரும்பப் பெறுவது எப்படி?

தேர்வு கட்டணத்தை ரீஃபண்ட் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி தங்களின் வங்கி விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்:

விண்ணப்பதாரர்கள் முதற்கட்டமாக neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். தளத்தில் தங்களின் விண்ணப்ப எண் (Application Number) மற்றும் கடவுச்சொல் (Password) அல்லது பிறந்த தேதியைப் பயன்படுத்தி லாகின் செய்ய வேண்டும்.

உள்நுழைந்த பிறகு, ‘Refund’ இணைப்பைக் கிளிக் செய்து, பின்வரும் துல்லியமான வங்கி விவரங்களை வழங்க வேண்டும்.

கணக்கு வைத்திருப்பவரின் பெயர் (Account Holder Name)

வங்கியின் பெயர் (Bank Name)

கணக்கு எண் (Account Number)

ஐஎஃப்எஸ்சி குறியீடு (IFSC Code)

இந்த வங்கி விவரங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க மே 27 அன்று இரவு 11.50 மணி வரை மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

வங்கி விவரங்களை மிகவும் கவனமாகப் பதிவிடுமாறு NTA அறிவுறுத்தியுள்ளது. தவறான விவரங்களை அளித்தால் கட்டணம் திரும்புவதில் சிக்கல் ஏற்படலாம் என்பதால், தேவைப்பட்டால் சரிபார்ப்பிற்காக ‘Cancelled Cheque’ நகலையும் மாணவர்கள் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version