Close Menu
    What's Hot

    நாடே போராடுது..!! இந்த நேரத்துல இது வேண்டாம்..!! ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்!

    ஆந்திராவில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா..!! அச்சத்தில் உறைந்த மக்கள்..!!

    திருச்சி;  மூதாட்டி விரலை கடித்துக் குதறிய எலி… அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அமைச்சர் விலகல் அரசின் செயல்பாட்டை பாதிக்காது..!! பிரதமர் மோடிக்கு அண்ணா ஹசாரே கடிதம்!
    Featured

    அமைச்சர் விலகல் அரசின் செயல்பாட்டை பாதிக்காது..!! பிரதமர் மோடிக்கு அண்ணா ஹசாரே கடிதம்!

    editor5By editor5July 23, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 14 12
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் பல்வேறு முறைகேடுகளுக்கு எதிராக இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே பிரதமர் நரேந்திர மோடிக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தில், அரசு நிர்வாகத்தில் பொறுப்புக்கூறலை வலியுறுத்திய அவர், தவறுகளுக்கு உயர்மட்ட அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

    கடந்த ஜூலை 20ஆம் தேதி பாராளுமன்றத்தை நோக்கி நடைபெற்ற பேரணியின்போது போராட்டக்காரர்கள் மீது காவல்துறை மற்றும் மத்திய படையினர் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதல் நாடு முழுவதும் பெரும் கண்டனத்தைப் பெற்றுள்ளது. டெல்லியில் உண்ணாவிரதம் இருந்த சோனம் வாங்சுக் மீது நடத்தப்பட்ட பலப்பிரயோகமும், அவரை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய சம்பவமும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன. இத்தகைய அடக்குமுறை அணுகுமுறைக்கு பதிலாக, அரசு பிரதிநிதிகளை அனுப்பி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று அன்னா ஹசாரே வலியுறுத்தியுள்ளார்.

    தனது கடிதத்தில் அன்னா ஹசாரே கூறியுள்ளதாவது: “ஒரு துறையின் ஒட்டுமொத்தத் தோல்விக்கு அதன் உயர் தலைமையே பொறுப்பேற்க வேண்டும். வழக்கமாக ஊழல் அல்லது முறைகேடு நடந்தால் கீழ்மட்ட அதிகாரிகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், அமைச்சர் பொறுப்பேற்று ராஜினாமா செய்தால் அரசு பலவீனமடையாது. மாறாக, நிர்வாகத்தில் பொறுப்புக்கூறல் அதிகரிக்கும். இது மற்ற அமைச்சர்களுக்கு எச்சரிக்கையாக அமைந்து, அரசின் செயல்பாட்டை மேலும் பொறுப்புமிக்கதாக மாற்றும்” என்பதாகும்.

    2024ஆம் ஆண்டு நீட் வினாத்தாள் கசிவு புகார்கள் எழுந்த நிலையில், இந்த ஆண்டும் அதே பிரச்சனை தொடர்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 22 லட்சம் மாணவர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்வுகள் ரத்து செய்யப்படலாம் அல்லது மறுதேர்வு நடைபெறலாம் என்ற நிச்சயமற்ற தன்மை மாணவர்களை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. ஊடக அறிக்கைகளின்படி, இதுவரை 22 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக வரும் தகவல்கள் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றன.

    அரசு வேலைவாய்ப்புகளில் ஏற்படும் தாமதங்கள், தொடர் வினாத்தாள் கசிவுகள், அதிகரித்து வரும் வேலையில்லா பிரச்சனை ஆகியவை இளைஞர்களிடையே கோபத்தையும் கொந்தளிப்பையும் அதிகரித்துள்ளன. இந்தப் பிரச்சனையை வெறும் சட்ட ஒழுங்கு பிரச்சினையாக அரசு அணுகக் கூடாது என்று அன்னா ஹசாரே எச்சரித்துள்ளார்.

    ஜனநாயக மற்றும் காந்திய அஹிம்சை வழியில் போராடும் மாணவர்கள், பெற்றோர்களின் கோரிக்கைகளை பொறுமையுடன் கேட்டு, பரஸ்பர நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என அவர் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார். இந்தச் சம்பவங்கள் நாடு முழுவதும் இளைஞர் போராட்டங்களைத் தூண்டியுள்ள நிலையில், அரசின் உடனடி நடவடிக்கைகள் மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    anna hazare Narendra Modi
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் ஜாமீன் கோரி மனு… பிற்பகலில் விசாரணை
    Next Article மாணவர் போராட்டம் எதிரொலி!. மெரினா கடற்கரைக்கு செல்ல தற்காலிக தடை!. பலத்த போலீஸ் பாதுகாப்பு!
    editor5

    Related Posts

    நாடே போராடுது..!! இந்த நேரத்துல இது வேண்டாம்..!! ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்!

    July 23, 2026

    ஆந்திராவில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா..!! அச்சத்தில் உறைந்த மக்கள்..!!

    July 23, 2026

    திருச்சி;  மூதாட்டி விரலை கடித்துக் குதறிய எலி… அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி

    July 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாடே போராடுது..!! இந்த நேரத்துல இது வேண்டாம்..!! ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்!

    ஆந்திராவில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா..!! அச்சத்தில் உறைந்த மக்கள்..!!

    திருச்சி;  மூதாட்டி விரலை கடித்துக் குதறிய எலி… அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி

    இனி ஸ்கிரீன் கிட்ட யாராச்சு போவீங்க..?? கருவேலி முள்ளை வெட்டிப்போட்ட தியேட்டர் நிர்வாகம்..!! ரசிகர்கள் கலகல!

    5 ஆண்டுகள் மட்டுமல்ல காலகாலத்திற்கும் தளபதி தான் முதல்வர்..!! நடிகர் ஜெய் நெகிழ்ச்சி பேச்சு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.