வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நாளை மறுதினம் (ஜூலை 3) ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இந்த வானிலை மாற்றத்தின் காரணமாக, தமிழகத்தின் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, கோவை, தேனி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், அப்பகுதிகளில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், நெல்லை, தேனி மற்றும் மதுரை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version