தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தற்போது இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்  பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

புதுக்​கோட்​டை​யில் பெ.சண்முகம் நேற்று செய்​தி​யாளகளைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  ஏதாவது ஒரு கட்​சியை அழிக்க வேண்​டும் என்னும் பாஜகவின் திட்டத்தில், அதி​முக பலி​யாகி இருப்பதாகக் கூறியதோடு, அடுத்த தேர்​தலுக்கு அதி​முக இருக்​குமா என்​பது கேள்விக்​குறி​தான் என சந்தேகத்தைக் கிளப்பினார்.

திமுக கூட்டணி குறித்த கேள்வி, அப்படி ஒரு கூட்டணியே இல்லை என்றார். திமுக தலைமையிலான மதச்​சார்​பற்ற முற்​போக்கு கூட்​ட​ணி​யில் நாங்​கள் இருக்​கிறோ​மா, இல்​லையா என்​ப​தை​விட அந்த கூட்​ட​ணியே தற்​போது இல்லை எனக் கூறியவர், அதே நேரம் தமிழகத்தின் நலன் சார்ந்த பிரச்​சினைகளில் திமுக உள்ளிட்ட கட்சிகளுடன்  இணைந்து போராடு​வோம் எனத் தெரிவித்தார்.

மேலும் தவெக அரசின் நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்ததன் காரணமாக தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யும் தற்​போது இல்லை என்றார் பெ.சண்முகம்.

சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அதி​முக எம்​எல்​ஏக்​கள் 4 பேர் ராஜி​னாமா செய்​து​விட்டு தவெக​வில் இணைந்​ததை நாங்கள் கடுமையாக எதிர்த்ததால்தான், அது தொடரவில்லை.

புதிய தவெக அரசு, 3 மாதம்​கூட தாங்​காது என திமுக தலை​வர் மு.க.ஸ்டா​லின், அதி​முக பொதுச் செய​லா​ளர் எடப்பாடி பழனி​சாமி போன்றவர்கல் கூறுவது தவறு என ஆவேசம் காட்டியவர், தமிழகத்​தில் பாஜக எடு​ப​டாத​தால் மோடி, அமித்ஷா ஆசி​யுடன் ஆர்​எஸ்​எஸ்​-ன் இன்​னொரு அமைப்பை அண்​ணா​மலை தொடங்​கி​யுள்​ளார். அதில் பல லட்​சம் பேர் இணைந்​ததாக ஒரு பிம்​பத்தை கிளப்​பி​விட்​டுள்​ளார்​ எனத் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version