கடந்த 25 வருடங்களில் மின்சார வாரியத்தில் நடந்த வரவு செலவு உள்ளிட்ட நிதியினங்கள் முதல் வேலை வாய்ப்பு குறித்த வெள்ளை அறிக்கையினை அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்டு விளக்கமளித்தார். 

மின்வாரியத்தின் மொத்தக் கடன் ரூ.2.47 லட்சம் கோடியாக உள்ளது

கடந்த 5 வருடங்களில் ரூ.87399 கோடி கடன் பெற்றும் மின்வாரியம் மேம்படுத்தப்படவில்லை

கடந்த 5 வருடங்களில்தான் செலவும் அதிகம், கடனும் அதிகம்.

மின்வாரியத்தின் வருவாய் அதிகரித்துள்ள நிலையில் கடனும் அதிகரித்துள்ளது

புதிதாக டிரான்ஸ்பார்மர்கள் வாங்கப்படவில்லை, பணியிடங்களும் நிரப்பப்படவில்லை. ஆனால் செலவு உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டிற்கு அதிகபட்சமாக 21,300 மெகாவாட் மின்சாரம் தேவையுள்ள நிலையில், தமிழ்நாடுமின்சார வாரியம் மூலமாக3495 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டிற்குள் 4246 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது

மத்தியத் தொகுப்பில் இருந்து 13,566 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாடு வாங்குகிறது

குறுகிய கால ஒப்பந்தம் மூலம் மின்சாரம் யூனிட்டிற்கு ரூ.8.91 கொடுத்து வாங்குகிறோம்

தினசரி மின்சாரம் வாங்கும் நிலைகளில் அதிகம் செலவு ஏற்படுகிறது

தமிழ்நாட்டுக்கு ஒரு யூனிட் மின்சாரம் ரூ.21 கொடுத்து எல்லாம் வாங்கியுள்ளனர்

நீண்டகால ஒப்பந்தம் மூலம் யூனிட் ஒன்றுக்கு  ரூ.6 வீதம் மின்சாரத்தை வாங்க முடியும்.

நீண்டகால ஒப்பந்தம் மூலம் மின்சாரம் வாங்கினால் ரூ.215 கோடி மிச்சமாகும்

தவெக ஆட்சியில் நீண்டகால ஒப்பந்தத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து மின்சாரம் கொள்முதல்

தமிழ்நாடு மின்வாரியத்துக்கு 1.40 லட்சம் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர்

ஆனால் 74714 பணியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். 65,921 பணியாளர்கள் பற்றாக்குறையாக உள்ளது.

கடந்த2015 -25 வரை அதாவது 10 வருடங்களில் 20,240 பேர் ஓய்வு பெற்றுள்ளனர்

அடுத்த 5 வருடங்களில் 16,782 பேர் பணி ஓய்வு பெறுகின்றனர்

கடந்த 25 வருடங்களில் 2011- 2016இல் தான் 9729பேர் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்

2001-2006இல் மின்வாரியத்தில் சுமார் 93 ஆயிரம் பேர் பணியில் இருந்தனர்

கடந்த திமுக ஆட்சியில் 9136 பேர் பணி ஓய்வு பெற்ற நிலையில், 343 பேர் மட்டுமே பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்

 மின்கட்டண உயர்வுக்குப் பிறகு திமுக ஆட்சியில் வருவாய் 100 சதவீதம் உயர்ந்தது

திமுக ஆட்சியில் ரூ.87,399 கோடி கடன் பெற்றிருந்தாலும்,  வேலைக்கு ஆட்கள் எடுக்கப்படவில்லை.

தமிழ்நாடு மின்வாரியத்தில் ஊழியர்களின் சம்பளத்துக்கு  பெரிய செலவு இல்லை

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட மின் தேவை 5 மடங்கு அதிகரித்து உள்ளது

கடந்த 25 ஆண்டுகளில் எந்த பெரிய அளவிலான மின்னுற்பத்தி  திட்டத்தையும் அரசு செய்யவில்லை. தனியார் மட்டுமே மின்னுற்பத்தியை பெரிய அளவில் தொடங்கியுள்ளனர்.

தனியார் நிறுவனங்கள் 40,000 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்கிறார்கள்

தனியார் அதிக அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யும்போது,  மின்வாரியம் ஏன் உற்பத்தி செய்யவில்லை.

ஊழியர் நியமனத்தில் கவனம் செலுத்தாமல் வேறு விஷயங்களில் திமுக ஆட்சியில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது

திமுக ஆட்சியில் மின்சாரம் கொள்முதல் செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்துள்ளனர். உற்பத்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்தவில்லை.

சோலார் மின்சாரம் ஒரு யூனிட்டிற்கு ரூ6.16 என மின்வாரியம் அதிகமாக கொள்முதல் செய்துள்ளது.

இதுவரை இடைத்தரகர்கள் மூலமாகவே மின்சார கொள்முதல் நடந்து உள்ளது.

இதனால் சோலார் மின்சாரத்துக்கு அதிகம் செலவிடப்பட்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் தமிழ்நாடு அரசு சொந்த முதலீடு செய்யப்படவில்லை.

முதற்கட்டமாக  மின்வாரியத்தில் 15,000 பேர் இந்த ஆண்டுக்குள் பணியில் சேர்க்கப்படுவார்கள்

2021-இல் திமுக ஆட்சியில் 5391 கேங்மேன்கள் பணிக்கு எடுக்கப்பட்டாலும் நிதித்துறை ஒப்புதல் வழங்கவில்லை.

முதலமைச்சரின் ஒப்புதல் பெறப்பட்டு இவர்கள் அனைவரும்  இந்த ஆண்டு வேலைக்கு எடுக்கப்படுவர்.

5391 கேங்மேன்களையும் சேர்த்து 20,449 பேர் இந்த ஆண்டு பணிக்கு வருவர்.

மின்வாரியத்தில் ஊதியம் பெறாமலேயே ஒப்பந்த தொழிலாளர்கள் பணி செய்து வருகிறார்கள்

இந்த ஆண்டு மின்கட்டண உயர்வு இருக்காது.

மின்வாரியத்திலும் ஆள் சேர்ப்பு, ஒப்பந்தங்களில் Party fund நடந்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version