பொதுமக்களுக்கு மேலும் சுமையளிக்கும் வகையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளன. பெட்ரோல் லிட்டருக்கு 87 காசுகளும், டீசல் லிட்டருக்கு 91 காசுகளும் அதிகரித்துள்ளது. இந்த அதிரடி விலையேற்றத்தின் காரணமாக, சென்னையில் நேற்று ஒரு லிட்டர் ரூ.104.57-க்கு விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல், இன்று ரூ.105.44 ஆக மாறியுள்ளது.
மேற்கு ஆசிய நாடுகளில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக, உள்நாட்டிலும் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாகவே, கடந்த 10 நாள்களில் மட்டும் தற்பொழுது 3-வது முறையாக எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த எரிபொருள் விலை உயர்வு, வாகன ஓட்டிகள் மத்தியிலும் சாமானிய மக்கள் மத்தியிலும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
