Close Menu
    What's Hot

    தூங்கும் தவெக அரசு! எப்போது விழித்துக்கொள்ள போகிறது.. மக்கள் தான் பாவம்..!! ஜெயக்குமார் கடும் தாக்கு..!!

    நவீன நடைமேடைகள், பயணச்சீட்டு முன்பதிவு மையம்… திறப்பு விழாவுக்கு தயாராகும் சென்னை பூங்கா ரயில் நிலையம்

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீடு:  மேலும் அதிகரிக்க திட்டம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»இனி இந்தியாவின் பதிலடி பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்- பிரதமர் மோடி
    Featured

    இனி இந்தியாவின் பதிலடி பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்- பிரதமர் மோடி

    Editor TN TalksBy Editor TN TalksMay 22, 2025Updated:May 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ovhrqjf pm modi 625x300 21 April 25.jpg
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இனி ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலுக்கும் இந்திய ராணுவத்தின்பதிலடி பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக புதுப்பிக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை, பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று திறந்து வைத்தார். இந்ததிட்டத்தின்படி, 508 ரயில் நிலையங்களை, ரூ.24,470 கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணிகள் ஓராண்டாக நடந்து வந்தன. தெற்கு ரயில்வேயில், 40க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன.
    அதன்படி நாடு முழுதும் பணிகள் நிறைவடைந்த 103 ரயில் நிலையங்களை, பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று திறந்து வைத்தார். ராஜஸ்தான் மாநிலம், பிகானீர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில், பிகானீர்- மும்பை விரைவு ரயிலை கொடியசைத்து பிரதமர் தொடங்கி வைத்தார்.
    தமிழ்நாட்டில் சென்னை பரங்கி மலை, சிதம்பரம், மன்னார்குடி, ஸ்ரீரங்கம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர், சாமல்பட்டி ஆகிய 9 ரயில் நிலையங்கள் திறக்கப்பட்டன.
    புதிதாக திறக்கப்பட்ட ரயில்நிலையங்களில், லிப்ட், நடை மேம்பாலம், கூடுதல் நடைமேடை, பயணியர் காத்திருப்பு அறைகள், நுழைவாயில்கள் சீரமைப்பு, எஸ்கலேட்டர்கள், மல்டி லெவல் பார்க்கிங், ‘சிசிடிவி’ கேமரா உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றுள்ளன.
    முன்னதாக ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் மாவட்டத்தில் உள்ள கர்ணி மாதா ஆலயத்திற்கு சென்ற பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.
    ரயில்நிலையங்கள் திறப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு பிகானீர் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ரூ.26,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில், மக்களை வாழ்த்துவதாக தெரிவித்தார்.
    இந்தியாவுக்கு எதிரான நேரடி போரில் பாகிஸ்தானால் ஒரு போதும் வெற்றி பெற முடியாது என்று தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியாவுக்கு சொந்தமான தண்ணீரை பாகிஸ்தானால் பெற முடியாது என்று குறிப்பிட்டார். இந்திய ராணுவத்தின் சக்ர வியூகத்தால் பாகிஸ்தான் மண்டியிட்டுள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்தார். இனி இந்தியர்களின் ரத்தத்துடன் விளையாட நினைத்தால், பாகிஸ்தான் பெரும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் இனி ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலுக்கும் இந்திய ராணுவத்தின் பதிலடி கடுமையாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
    அணு ஆயுத அச்சறுத்தலுக்கு இந்தியா பயப்படப்போவதில்லை என்று கூறிய அவர், நமது ராணுவத்தின் துணிச்சலால் வலுவாக இருப்பதாக தெரிவித்தார். பாகிஸ்தானுடன் இனி எந்த வகையிலும் பேச்சு என்பதே கிடையாது என்றும் அப்படி பேசினால், அது பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பற்றியதாக மட்டுமே இருக்கும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

    india India First India operation sindoor india pakistan conflict india pakistan news
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎருதாட்டம் நிகழ்ச்சியில் தூக்கி வீசப்பட்ட காவலர்.. சிகிச்சைக்காக மருத்துவமனயில் அனுமதி!!
    Next Article தமிழகத்திற்கு காவிரியில் 40 டி.எம்.சி. நீர் திறக்க உத்தரவு..!
    Editor TN Talks

    Related Posts

    தூங்கும் தவெக அரசு! எப்போது விழித்துக்கொள்ள போகிறது.. மக்கள் தான் பாவம்..!! ஜெயக்குமார் கடும் தாக்கு..!!

    July 15, 2026

    நவீன நடைமேடைகள், பயணச்சீட்டு முன்பதிவு மையம்… திறப்பு விழாவுக்கு தயாராகும் சென்னை பூங்கா ரயில் நிலையம்

    July 15, 2026

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீடு:  மேலும் அதிகரிக்க திட்டம்!

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தூங்கும் தவெக அரசு! எப்போது விழித்துக்கொள்ள போகிறது.. மக்கள் தான் பாவம்..!! ஜெயக்குமார் கடும் தாக்கு..!!

    நவீன நடைமேடைகள், பயணச்சீட்டு முன்பதிவு மையம்… திறப்பு விழாவுக்கு தயாராகும் சென்னை பூங்கா ரயில் நிலையம்

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீடு:  மேலும் அதிகரிக்க திட்டம்!

    அடடே..!! 10 நிமிஷம் தான்.. வீட்டுக்கே வரும் சிலிண்டர்.. அசத்தும் இன்ஸ்டாமார்ட்..!!

    1,599வது நாளை எட்டிய ரஷியா – உக்ரைன் போர்..!! இன்னமும் குறையாத சூடு.. தொடரும் தாக்குதல்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.