தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் பணிகளை தொடங்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் டிதம் அனுப்பியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்ற தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
இந்தநிலையில், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் திருச்சி கிழக்கு தொகுதி பதவியை ராஜினாமா செய்தார். தவெக அரசை ஆதரித்து அதிமுகவில் இருந்து வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் ஜெயக்குமார் (பெருந்துறை), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து, தமிழகத்தில் 5 சட்டமன்றத் தொகுதிகள் காலியானதாக அரசிதழில் வெளியிடப்பட்டது.
இந்தநிலையில், இந்த 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் பணிகளை தொடங்குமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அதிகாரப்பூர்வமாகக் கடிதம் அனுப்பியுள்ளார். 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தலை நடத்தியாக வேண்டுமென்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
