Close Menu
    What's Hot

    நாகை : படகு பழுதால் 2 நாட்களாக கடலில் தத்தளித்த மீனவர்கள்..! பத்திரமாக மீட்ட சக மீனவர்கள்..!

    தவெக அரசுக்கு முதல்வர் என்றாலே ஸ்டாலின் தான் நியாபகம் வருகிறார் போல..! முன்னாள் அமைச்சர் சிவசங்கர் பேட்டி..!

    காவி நிறத்திற்கு மாறும் இந்திய ஹாக்கி சீருடை… “விளையாட்டுத் துறையிலும் அரசியலா..?”

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தீவிரமடையும் காவிரி சர்ச்சை.. பந்த் மூலம் போராட்டத்தை அறிவிக்கும் கர்நாடகா.. பெங்களூரில் பரபரப்பு!
    Featured

    தீவிரமடையும் காவிரி சர்ச்சை.. பந்த் மூலம் போராட்டத்தை அறிவிக்கும் கர்நாடகா.. பெங்களூரில் பரபரப்பு!

    editor5By editor5July 30, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 44 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான பிரச்சினை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் மாநில அளவிலான பந்த் நடத்த கன்னட அமைப்புகள் தயாராகி வருகின்றன. காவிரி நீர் ஒழுங்குமுறை குழு (CWRC) வழங்கிய உத்தரவுக்கு எதிராக விவசாயிகள், கன்னட அமைப்புகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

    காவிரி நீர் ஒழுங்குமுறை குழு நேற்று முன்தினம் (ஜூலை 28) பிறப்பித்த உத்தரவின்படி, ஜூலை 30 முதல் 15 நாட்களுக்கு தினசரி 3,500 கனஅடி தண்ணீரை பிலிகுண்ட்லு எல்லையில் தமிழகத்துக்கு கர்நாடகா திறந்து விட வேண்டும். இது சுமார் 4 டிஎம்சி தண்ணீருக்கு சமம். ஆனால், கர்நாடகா இதை மறுத்து வருகிறது. மாநிலத்தில் கடுமையான பருவமழை பற்றாக்குறை நிலவுவதால், குடிநீர் தேவைக்கே தண்ணீர் போதவில்லை என்று அரசு வாதிடுகிறது. கிருஷ்ணராஜ சாகர் (கேஆர்எஸ்) உள்ளிட்ட அணைகளில் நீர் இருப்பு மிகவும் குறைவாக உள்ளது.

    பெங்களூர், மண்டியா, மைசூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கன்னட அமைப்பினரும் விவசாய சங்கங்களும் தீவிர எதிர்ப்பு போராட்டங்களை நடத்தினர். கர்நாடக ரக்ஷண வேதிகே அமைப்பின் தலைவர் பிரவீன் செட்டி வெளியிட்ட வீடியோவில், “இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டது, ஆனால் கர்நாடகாவுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை. மத்திய அரசு ஒரு கண்ணில் வெண்ணெய், மற்றொன்றில் சுண்ணாம்பு போல் நடந்துகொள்கிறது. குடிநீருக்கே தண்ணீர் இல்லாத நிலையில் தமிழகத்துக்கு எப்படி தர முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.

    அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து மாநில அளவில் பந்த் நடத்தி மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 1991-ல் முன்னாள் முதல்வர் எஸ். பங்காரப்பா காவிரி விவகாரத்தில் கர்நாடக உரிமையைப் பாதுகாக்க அவசரச் சட்டம் கொண்டு வந்ததைப் போல, தற்போதைய முதல்வர் டி.கே. சிவக்குமார் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரினார். மழை பெய்து அணைகள் நிரம்பினால் மட்டுமே தண்ணீர் திறக்கலாம் என்பது அவர்களின் நிலைப்பாடு.

    கன்னட ஆர்வலர் வாட்டாள் நாகராஜ் நாளை (ஜூலை 31) பந்த் தேதியை அறிவிக்க உள்ளார். அதன்பின் வன்மூட் ஹோட்டலில் அனைத்து சங்கங்களுடன் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும். மாநில அரசும் CWMAவில் மேல் முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்தப் பிரச்சினை தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இரு மாநிலங்களும் உரையாடி தீர்வு காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

     

    bandh Cauvery Water Dispute karnataka
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article12 வயது சிறுவன் கார் விபத்தில் உயிரிழப்பு; தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை!
    Next Article சீன நிறுவனங்களால் பேராபத்து!. 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் BMW!. அதிர்ச்சி அறிவிப்பு!
    editor5

    Related Posts

    நாகை : படகு பழுதால் 2 நாட்களாக கடலில் தத்தளித்த மீனவர்கள்..! பத்திரமாக மீட்ட சக மீனவர்கள்..!

    July 31, 2026

    தவெக அரசுக்கு முதல்வர் என்றாலே ஸ்டாலின் தான் நியாபகம் வருகிறார் போல..! முன்னாள் அமைச்சர் சிவசங்கர் பேட்டி..!

    July 31, 2026

    காவி நிறத்திற்கு மாறும் இந்திய ஹாக்கி சீருடை… “விளையாட்டுத் துறையிலும் அரசியலா..?”

    July 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாகை : படகு பழுதால் 2 நாட்களாக கடலில் தத்தளித்த மீனவர்கள்..! பத்திரமாக மீட்ட சக மீனவர்கள்..!

    தவெக அரசுக்கு முதல்வர் என்றாலே ஸ்டாலின் தான் நியாபகம் வருகிறார் போல..! முன்னாள் அமைச்சர் சிவசங்கர் பேட்டி..!

    காவி நிறத்திற்கு மாறும் இந்திய ஹாக்கி சீருடை… “விளையாட்டுத் துறையிலும் அரசியலா..?”

    விஜய்யின் வெள்ளிக்கிழமை ரகசியம்.. பட்டு வேஷ்டி, சட்டைக்கு பின்னால் இருக்கும் சென்டிமென்ட்!

    பாக்.-ல் நிலக்கரி சுரங்க வெடி விபத்து.. எகிறும் பலி எண்ணிக்கை! மீட்புப்பணி தீவிரம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.