Close Menu
    What's Hot

    மின்பகிர்மான கழக ஓய்வு ஊழியர்களுக்கு குட் நியூஸ்..!! சம்பள உயர்வுக்கு புதிய உத்தரவு அமல்..!!

    மளமளவென சரியும் அதிமுக கோட்டை..!! இதுவரை 32% பேர் விலகல்..!! அப்செட்டில் இபிஎஸ்..!!

    செந்தில் பாலாஜி, அசோக்குமார் விவகாரத்தில் புதிய திருப்பம்..!! பெற்றோர் கைக்கு போன சம்மன்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»வீடு புகுந்து தாக்கிய வழக்கு: இன்று ஆப்சென்ட் ஆன மரிய வில்சன்..!! புதுவை கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..!!
    Featured

    வீடு புகுந்து தாக்கிய வழக்கு: இன்று ஆப்சென்ட் ஆன மரிய வில்சன்..!! புதுவை கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..!!

    editor5By editor5July 4, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 11 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் பட்ஜெட் பணிகள் நடந்து வருவதால், மரியவில்சன் நேரில் ஆஜராக முடியவில்லை என அவரது வழக்கறிஞர் விளக்கம் அளித்தார்.

    தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழக நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மரிய வில்சன், தனது அண்ணன் வீட்டில் நடத்திய தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகாத நிலைக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

    கடந்த 2022 ஆகஸ்ட் 8-ம் தேதி இரவு 8 மணியளவில் புதுச்சேரி எழில் நகரில் வசிக்கும் மரிய வில்சனின் அண்ணன் மரிய கிளோத் வீட்டிற்கு சென்ற மரிய வில்சன் மற்றும் அவரது தந்தை நெஸ்டோர் ஆகியோர், வீட்டுக் கதவை உடைத்து உள்ளே நுழைந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு அண்ணன் மரிய கிளோத் மற்றும் அவரது மனைவி கெரோலின் ஆகியோரை ஆபாசமாகத் திட்டியதுடன், உருட்டுக் கட்டையால் தாக்கியதாகவும் புகார் எழுந்துள்ளது.

    மேலும், கெரோலினின் ஆடைகளைப் பிடித்து இழுத்து மானபங்கப்படுத்தியதாகவும், “செயின்ட் ஆண்டனி பள்ளி நிர்வாகத்தில் தலையிட்டால் குடும்பத்தோடு கொலை செய்துவிடுவோம்” என மிரட்டியதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. படுகாயமடைந்த மரிய கிளோத் தம்பதியினர் லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். இதன்பேரில் அத்துமீறி நுழைதல், தாக்குதல், சேதம் விளைவித்தல், ஆபத்தான ஆயுதத்தால் காயப்படுத்துதல், பெண்ணை மானபங்கப்படுத்துதல், கொலை மிரட்டல் மற்றும் கூட்டுச் சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    போலீசார் மரிய வில்சன் மற்றும் நெஸ்டோரை கைது செய்து பின்னர் ஜாமினில் விடுவித்தனர். இந்த வழக்கு புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் (மாஜிஸ்திரேட் சேரலாதன்) விசாரணையில் உள்ளது. பல மாதங்களாக வழக்கு விசாரணைக்காக வாய்தா அளிக்கப்பட்டபோதிலும், மரிய வில்சன் தொடர்ந்து நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை என்று தெரிகிறது. கடந்த மாதமும் அவர் ஆஜராகாத நிலையில், குற்றப்பத்திரிகையை நேரில் பெற இன்று (ஜூலை 4, சனிக்கிழமை) கட்டாயம் ஆஜராக வேண்டும் என மாஜிஸ்திரேட் உத்தரவிட்டிருந்தார்.

    எனினும் இன்றும் மரிய வில்சன் ஆஜராகவில்லை. அவரது சார்பில் வக்கீல் சிவக்குமார் ஆஜராகி, “தமிழகத்தில் பட்ஜெட் தொடர்பான முக்கியப் பணிகள் நடைபெறுவதால் அமைச்சர் நேரில் வர முடியவில்லை” என விளக்கம் அளித்தார். இதற்கு நீதிபதி சேரலாதன் கடும் அதிருப்தி தெரிவித்தார். “இன்று சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால்தான் ஆஜராகும்படி உத்தரவிட்டேன். இப்போதும் வரவில்லையே?” எனக் கேள்வி எழுப்பினார்.

    வரும் 6-ம் தேதி ஆஜராக வேண்டும் என மீண்டும் உத்தரவிட்ட நீதிபதி, வக்கீல் அதற்கும் முடியாது எனத் தெரிவித்ததையடுத்து, ஜூலை 10-ம் தேதி கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என இறுதி உத்தரவு பிறப்பித்தார். புகார்தாரர் தரப்பில் வக்கீல் பிரவீன் ஆஜரானார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏறப்போக்கியுள்ளது. அமைச்சர் பதவியில் இருந்தபோதும் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் தொடர்ந்து தவிர்ப்பது குறித்து பலரும் விமர்சனம் செய்கின்றனர். வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை ஜூலை 10-ம் தேதி நடைபெறவுள்ளது.

    mariya wilson Minister puducherry court
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபள்ளிகள் அருகே இதை விற்க முற்றிலும் தடை..!! அமைச்சர் நர்ஹரி ஜிர்வால் முக்கிய அறிவிப்பு..!!
    Next Article கோவையில் மீண்டும் கொடூரம்!. மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்!.
    editor5

    Related Posts

    மின்பகிர்மான கழக ஓய்வு ஊழியர்களுக்கு குட் நியூஸ்..!! சம்பள உயர்வுக்கு புதிய உத்தரவு அமல்..!!

    July 4, 2026

    மளமளவென சரியும் அதிமுக கோட்டை..!! இதுவரை 32% பேர் விலகல்..!! அப்செட்டில் இபிஎஸ்..!!

    July 4, 2026

    செந்தில் பாலாஜி, அசோக்குமார் விவகாரத்தில் புதிய திருப்பம்..!! பெற்றோர் கைக்கு போன சம்மன்..!!

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மின்பகிர்மான கழக ஓய்வு ஊழியர்களுக்கு குட் நியூஸ்..!! சம்பள உயர்வுக்கு புதிய உத்தரவு அமல்..!!

    மளமளவென சரியும் அதிமுக கோட்டை..!! இதுவரை 32% பேர் விலகல்..!! அப்செட்டில் இபிஎஸ்..!!

    செந்தில் பாலாஜி, அசோக்குமார் விவகாரத்தில் புதிய திருப்பம்..!! பெற்றோர் கைக்கு போன சம்மன்..!!

    அவதூறு வழக்கிற்கு 6 மணி நேரம் விசாரணையா..?? திமுக நிர்வாகி சரமாரி கேள்வி..!!

    முப்படைகளின் வலிமை அதிகரிப்பு.. ரூ.52,000 கோடிக்கு ஆயுதம் கொள்முதல்..!! பாதுகாப்பு கவுன்சில் கிரீன் சிக்னல்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.