Close Menu
    What's Hot

    முழு டிஜிட்டல் மயம்.. தொடங்கியாச்சு மக்கள்தொகை கணக்கெடுப்பு..!! தமிழ்நாட்டில் எப்போ தெரியுமா..??

    துரதிஷ்டவசமாக உதயசூரியனில் போட்டி.. அதனால்தான் இப்படி..!! துரை வைகோ ஓபன் டாக்..!!

    “வெட்கக்கேடு” சிங்கப்பெண் அதிரடி படை பிரிவு பெண் காவலருக்கே இந்த நிலைமையா?. நயினார் கண்டனம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»முதியோர், மாற்றுத்திறனாளிகளே முன்னுரிமை..!! வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்..!!
    Featured

    முதியோர், மாற்றுத்திறனாளிகளே முன்னுரிமை..!! வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்..!!

    editor5By editor5June 1, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 17
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகள் இத்திட்டத்தை தவறாமல் பயன்படுத்திகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே நியாயவிலைப் பொருட்களை வழங்கும் சிறப்பு ஏற்பாடு வரும் ஜூன் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சென்னையில் செயல்படுத்தப்பட உள்ளது. கூட்டுறவுச் சங்கங்கள் கூடுதல் பதிவாளர் (சென்னை மண்டலம்) பாபு இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் மூலம் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களது இல்லங்களுக்கே அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

    இதன் ஒரு பகுதியாக, ஜூன் மாதம் 2 மற்றும் 3 ஆகிய இரு நாட்களில் சென்னை மாநகரின் 18 மண்டலங்களில் 990 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள் நேரடியாக பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அண்ணாநகர், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டை, அடையாறு, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அம்பத்தூர், கோடம்பாக்கம், வளசரவாக்கம், பல்லாவரம், குரேம்பேட்டை மற்றும் தாம்பரம் ஆகிய 18 மண்டலங்களில் இந்த சிறப்பு விநியோகப் பணி தீவிரப்படுத்தப்படும்.

    இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு உரிய பொருட்களை தவறாமல் பெற்றுக்கொள்ள வேண்டும் என கூட்டுறவுத் துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த ஏற்பாடு மூலம் பயனாளிகளுக்கு பயணச் சிரமம் தவிர்க்கப்பட்டு, உரிய நேரத்தில் தரமான பொருட்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாயுமானவர் திட்டம் என்பது முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் அரசு கொண்டு வந்த முக்கிய திட்டமாகும். இதன் கீழ் வழங்கப்படும் பொருட்கள் அரசு நிர்ணயித்த நியாய விலையிலேயே வழங்கப்படும்.

    சென்னை மண்டல கூட்டுறவுத் துறை அதிகாரிகள் இந்த இரு நாட்களிலும் விநியோகப் பணியை கண்காணித்து, எந்தவிதமான குறைபாடும் இல்லாமல் பணிகள் முடிக்கப்படுவதை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பயனாளிகள் தங்கள் குடும்ப அட்டை மற்றும் அடையாள அட்டைகளை தயாராக வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விநியோகத்தின் மூலம் ஆயிரக்கணக்கான முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயனடையவுள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெக கொள்கை தலைவர் அஞ்சலை அம்மாள் பிறந்தநாள்!. திருச்சியில் முதல்வர் விஜய் மரியாதை!
    Next Article 12-ஆம் வகுப்பு விடைத்தாள் கசிவு: தொழில்நுட்பக் கோளாறை ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ!
    editor5

    Related Posts

    முழு டிஜிட்டல் மயம்.. தொடங்கியாச்சு மக்கள்தொகை கணக்கெடுப்பு..!! தமிழ்நாட்டில் எப்போ தெரியுமா..??

    June 1, 2026

    துரதிஷ்டவசமாக உதயசூரியனில் போட்டி.. அதனால்தான் இப்படி..!! துரை வைகோ ஓபன் டாக்..!!

    June 1, 2026

    “வெட்கக்கேடு” சிங்கப்பெண் அதிரடி படை பிரிவு பெண் காவலருக்கே இந்த நிலைமையா?. நயினார் கண்டனம்!

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முழு டிஜிட்டல் மயம்.. தொடங்கியாச்சு மக்கள்தொகை கணக்கெடுப்பு..!! தமிழ்நாட்டில் எப்போ தெரியுமா..??

    துரதிஷ்டவசமாக உதயசூரியனில் போட்டி.. அதனால்தான் இப்படி..!! துரை வைகோ ஓபன் டாக்..!!

    “வெட்கக்கேடு” சிங்கப்பெண் அதிரடி படை பிரிவு பெண் காவலருக்கே இந்த நிலைமையா?. நயினார் கண்டனம்!

    இனி யாரும் இந்த தப்ப செய்யாதீங்க..!! உடைந்த குரலில் தொண்டர்களுக்கு இபிஎஸ் வேண்டுகோள்..!!

    அப்பா சொன்ன கிரிக்கெட் ரகசியம்.. என் லட்சியம் இதுதான்!. மனம் திறந்த வைபவ் சூர்யவன்ஷி!

    Trending Posts

    காவி உடையில் திருவள்ளுவர்!. ஆர்.என். ரவி போட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை!

    June 1, 2026

    இந்தியாவில் 30 நாட்களில் ரூ.10 லட்சம் செலவு செய்த அமெரிக்க தம்பதி!. வைரல் பதிவு!

    June 1, 2026

     அண்ணாமலையின் அடுத்த மெகா பிளான்?. நாளை மறுநாள் வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

    June 1, 2026

    நடிகர் மாதவன் பிறந்தநாள்!. ஜி.டி.என் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு!

    June 1, 2026

    ”அதிமுக ஒன்றிணைய வேண்டும்”!. மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால்..வீடியோ வெளியிட்டு நிர்வாகி தற்கொலை!

    June 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.