வருக்கால வைப்பு நிதி அதாவது PROVIDENT FUND-ல் அதிரடியாக சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு பணியாளர்கள் மத்தியில் வரவேற்புக் கிடைத்திருக்கிறது. வருங்கால வைப்பு நிதி அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள சுமார் 8 கோடி ஊழியர்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளன. அதாவது,
* புதிய விதிகளின்படி, மாதம் ரூ.15,000 வரை அடிப்படை ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு 12 சதவீத பி.எப். பங்களிப்பு கட்டாயமாக இருக்கும்.
* அதன்படி, ஊழியரும் நிறுவனமும் தலா அதிகபட்சம் ரூ.1,800 வரை மாதந்தோறும் கட்டாயமாக செலுத்த வேண்டும்.
* ஒருவரின் அடிப்படை சம்பளம் ரூ.1 லட்சமாக இருந்தாலும், கட்டாய பி.எப். பிடித்தம் ரூ.1,800 மட்டுமே இருக்கும்.
* அதற்கு மேல் ஓய்வூதிய சேமிப்பை அதிகரிக்க விரும்பும் ஊழியர்கள், தாங்கள் விரும்பும் அளவில் கூடுதல் தொகையை பி.எப். கணக்கில் செலுத்தலாம்.
* நிறுவனங்களும் அந்த கூடுதல் தொகைக்கு இணையான பங்களிப்பை வழங்கலாம். இருப்பினும், அது கட்டாயமாக இருக்காது.
* புதிய விதிகளின்படி, ஊழியர் அல்லது நிறுவனம் விருப்பப் பங்களிப்பை எந்த நேரத்திலும் குறைக்கவோ அல்லது நிறுத்தவோ முடியும்.
* இதன் மூலம், உறுப்பினர்கள் தங்களின் ஓய்வூதிய சேமிப்பை தேவைக்கேற்ப திட்டமிட்டு நிர்வகிக்கும் வசதி கிடைக்கும்.
* தகுதியான இருப்புத் தொகையில் 100 சதவீதம் வரை முன்பணமாக பெற அனுமதி.
* உறுப்பினர்கள் தங்களது பி.எப். கணக்கில் உள்ள மொத்த இருப்புத் தொகையில் குறைந்தபட்சம் 25 சதவீதத்தை இருப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை தொடரும்.

