இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) சமீபத்திய தரவுகளின்படி, ஜூன் 1 முதல் ஜூலை 26 வரை நாடு முழுவதும் 337.2 மி.மீ. (33.72 செ.மீ.) மழை பதிவாகியுள்ளது. இயல்பான அளவு 399.2 மி.மீ. என்பதால் ஒட்டுமொத்த பற்றாக்குறை 15.5 சதவீதமாக உள்ளது. ஜூன் மாதத்தில் கிட்டத்தட்ட 40 சதவீதம் வரை பற்றாக்குறை இருந்த நிலையில், ஜூலை மாதத்தில் பருவமழை தீவிரமடைந்ததால் நிலைமை கணிசமாக மேம்பட்டுள்ளது. இந்த மாத மழை இயல்பை விட வெறும் 1 சதவீதம் மட்டுமே குறைவாக உள்ளது.

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 16 சதவீத பற்றாக்குறையுடன் தொடர்கிறது. ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளாவில் 37 சதவீதம், பீகாரில் 39 சதவீதம், ஜார்கண்டில் 34 சதவீதம், கர்நாடகாவில் 25 சதவீதம், கோவாவில் 37 சதவீதம், அசாமில் 29 சதவீதம், அருணாசலப் பிரதேசத்தில் 39 சதவீதம், மேகாலயாவில் 56 சதவீதம் வரை பற்றாக்குறை நீடிக்கிறது. மாறாக, லடாக்கில் 199 சதவீதம் அதிக மழை பதிவாகியுள்ளது. ஒடிசாவில் 18 சதவீதம், குஜராத்தில் 13 சதவீதம், சிக்கிம் மற்றும் அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் 6 சதவீதம் அதிக மழை பெய்துள்ளன.

எல் நினோ தாக்கம் காரணமாக ஜூன் மழை வரலாற்று ரீதியாக குறைவாக இருந்தது. ஜூலையில் மழை சமநிலைக்கு வந்தாலும், ஆகஸ்ட் மாதத்திலும் ஏற்றத் தாழ்வுகள் தொடர வாய்ப்புள்ளதாக வானிலை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலும், வடகிழக்கு பகுதிகளிலும் மழைப் பற்றாக்குறை விவசாயத்தை பாதிக்கக்கூடும். நீர்நிலைகள் மற்றும் குறுகிய கால பயிர் வகைகளை விவசாயிகள் தேர்வு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version