தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் சுங்கக்கட்டணம் உயரும் நிலையில், வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலை விதிகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் சுங்கக் கட்டணங்கள் 3% முதல் 5% வரை வருடாந்திர அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

தமிழ்நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) 60-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த சுங்கச் சாவடிகளில் கடந்த ஏப்ரல் 1 முதல் கட்டணம் உயர்த்தப்பட்டது. வாகனங்களின் வகையைப் பொறுத்து ரூ.5 முதல் ரூ.100 வரையிலும், மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ300-லிருந்து ரூ350 வரையிலும் அதிகரிக்கப்பட்டது. இதற்கு வாகன ஓட்டிகள் தரப்பில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கட்டண உயர்வு சரக்கு வாகனங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் கூடுதல் சுமையை ஏற்படுத்துவதால், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வுக்கும் இது வழிவகுக்கும் என லாரி உரிமையாளர்களும் வாகன ஓட்டிகளும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நாளை முதல் மீண்டும் தமிழ்நாட்டில் சுங்கக் கட்டணம் உயர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான வாகனங்களுக்கும் சுங்கக் கட்டண உயர்வு பொருந்தும். ரூ. 25 முதல் ரூ.100 வரை சுங்கக்கட்டணம் உயரும் என தகவல் வெளியாகி உள்ளது.

அண்மையில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் சுங்கக்கட்டணம் அதிகரிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்தக் கட்டண உயர்வு என்பது பொதுமக்களை மறைமுகமாகப் பாதிக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version