கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் 500 மின்சாரப் பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்காக அறிவிக்கப்பட்டிருந்த சர்வதேச டெண்டரைத் தற்போதைய தவெக அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது.

தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான புதிய அரசு அமைந்ததைத் தொடர்ந்து, கடந்த திமுக ஆட்சியில் கோரப்பட்ட பல்வேறு துறைகளின் டெண்டர்களை மறுஆய்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாகவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், கடந்த திமுக ஆட்சியின் போது, ஜெர்மன் வங்கியின்  நிதியுதவியுடன் பொதுப் போக்குவரத்துத் துறையை மேம்படுத்த 500 அதிநவீன மின்சாரப் பேருந்துகளை வாங்குவதற்கான டெண்டர் முறைப்படி அறிவிக்கப்பட்டிருந்தது.

மறுஆய்வுக் குழுவின் தீவிரப் பரிசீலனைக்குப் பிறகு, திமுக ஆட்சியில் இறுதி செய்யப்பட்ட இந்த டெண்டர் நடைமுறையானது அரசுக்குக் கடுமையான நிதியிழப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் அமைந்துள்ளதாக கூறி இந்த டெண்டரை தவெக அரசு ரத்து செய்து அறிவித்துள்ளது.

தவெக அரசு பொறுப்பேற்றது முதலே கடந்த கால டெண்டர்களில் உள்ள முறைகேடுகள் மற்றும் கூடுதல் செலவினங்களைக் கண்டறியும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதன் விளைவாக, ஏற்கனவே ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் டெண்டர், கோயில் திட்டங்கள் என பல்வேறு அரசுத் துறைகளில் கோரப்பட்டிருந்த முக்கிய டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version