தமிழக அரசின் புதிய திட்டமான “தாய் மாமன் தங்க மோதிரம்” திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதற்காக, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (TNMSC) தங்கம் கொள்முதல் செய்வதற்கான புதிய டெண்டரை (ஒப்பந்தப்புள்ளி) கோரியுள்ளது.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 15ம் தேதி இத்திட்டம் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது இதற்கான முதற்கட்டப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பயனாளிகளுக்கு வழங்குவதற்காகப் பெருமளவில் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. அதன் முக்கிய விவரங்கள் பின்வருமாறு:

மொத்தம் 4,41,667 தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. பயனாளிகளுக்கு வழங்கப்படும் ஒவ்வொரு தங்க மோதிரமும் தலா 1 கிராம் எடையைக் கொண்டிருக்கும். இத்திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்துவதற்காக ₹755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வழங்கப்படும் தங்கத்தின் தரத்தில் எவ்வித சமரசமும் இருக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. எனவே, கொள்முதல் செய்யப்படும் அனைத்து தங்க மோதிரங்களும் பின்வரும் தரக் கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஹால்மார்க் (916 Hallmark) முத்திரை பதிக்கப்பட்ட நம்பகமான தங்கமாக மட்டுமே இவை கொள்முதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலத்திற்குள் திட்டத்தைத் தொடங்கி ஏழை எளிய மக்களுக்குச் சென்றடையச் செய்யும் நோக்கில், TNMSC மூலம் தற்போது இந்த அதிவேக கொள்முதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version