சென்னையின் வெளிப்புற பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையிலும், பயண நேரத்தை குறைக்கும் வகையிலும் பல்வேறு பாலங்கள் மற்றும் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில்,

சென்னை இ.சி.ஆர் சாலையில், திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை சுமார் 13.3கிலோ மீட்ட தொலைவிற்கு உயர்மட்ட மேம்பாலச் சாலை அமைப்பதற்கு டெண்டர் கோரப்பட்டிருந்தது. அதனடிப்படையில் சுமார் ரூ.2,100கோடி மதிப்பீட்டில் இந்த ஒப்பந்தம் தனியார் நிறுவனத்திற்கு கடந்த ஆண்டில் வழங்கப்பட்டிருந்தது.

இந்த ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு குற்றம் சாட்டி வண்டது. சமீபத்தில் கரூருக்கு சென்றிருந்த முதலமைச்சர் கூட, இது குறித்து குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்,

திருவான்மியூர் – உத்தண்டி உயர்மட்ட மேம்பாலச் சாலை திட்டத்தை ரத்து செய்வதாக ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு கொடுக்கப்பட்ட ஒப்பந்தத்தை ஆய்வு செய்யும் படியும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version