திருப்பத்தூரில் ஒப்பந்ததாரர்கள் முறையாக ஊதியம் வழங்காததால், குப்பை அள்ளும் பணியினை, நகராட்சி நிர்வாகமே டுத்து நடத்த வேண்டும் என தூய்மைப் பணியாளர்கள் தங்களின் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை நகராட்சிகளில், 200க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் உள்பட ஒப்பந்தப் பணியாளர்கள் பணி செய்து வருகின்றனர்.
திமுக மாவட்ட துணைச் செயலளர் மோகன் என்பவர் நகராட்சியில் குப்பை அள்ளுதல் உள்ளிட்டப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து ஒப்பந்த தொழிலாளர்களைப் பணிக்கு பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மோகன் 5 மாதமாக சம்பளத்தை வழங்கவில்லை எனவும் பலமுறை கேட்டும் அவர் செவி சாய்க்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தூய்மைப் பணியாளர்கல் இன்று, நகராட்சி கமிஷனர் சாந்தியை முற்றுகையிட்டு தங்களுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்தனர்.
அப்போது எங்களுக்கு ஐந்து மாத காலமாக சம்பளமே வரல, குப்பை வாருபவர்கள் தானே என எங்கள் மதிக்க மாட்டேங்குறாங்க, எனவே ஒப்பந்த முறையில் சம்பளம் வழங்குவதை நிறுத்தி நகராட்சி நிர்வாகத்தினரே எங்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது
