ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் 62 வாக்கு எண்ணும் மையங்களில் இந்தப் பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபடுகின்றனர். முதற்கட்டமாக, தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. தொடர்ந்து இவிஎம் எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் தமிழகமே பரபரப்புக்கு உள்ளாகி  இருக்கிறது. இந்த நிலையில் நடிகை த்ரிஷா திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

நடிகை த்ரிஷாவை தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைத்து பல்வேறு யூகங்கள் பரவி வருகின்றன. தவெக வெற்றி பெற்று விஜய் முதலமைச்சரானால், த்ரிஷா துணை முதலமைச்சராகும் வாய்ப்பு உள்ளதாக தவெகவினரால் கூறப்பட்டு வருகிறது.

ஏற்கனவே தவெக தலைவர் விஜய் ஆன்மிக யாத்திரை மேற்கொண்டிருப்பதைப் போல் த்ரிஷாவும் கோயில் கோயிலாக சென்று வரும் நிலையில் த்ரிஷாவின் திருப்பதி சாமி தரிசனம், அவர் நினைத்தது நடக்குமா என்னும் கேள்வியை எழுப்பியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version