Close Menu
    What's Hot

    சூடுபிடிக்கும் குதிரை பேரம் வழக்கு..!! நீதிமன்றத்தில் ஆஜரானார் செந்தில் பாலாஜி..!!

    இறுதி வடிவம் பெறும் தமிழக பட்ஜெட்..!! மக்கள் எதிர்பார்க்கும் வாக்குறுதிகள் இடம்பிடிக்குமா?

    கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்..!! சக நோயாளி அடித்துக்கொ*ல..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அமெரிக்காவின் புதிய தாக்குதல்.. ஹவுதிகளுக்கு டிரம்ப் வார்னிங்! ஹார்முஸ் ஜலசந்தியில் உச்சக்கட்ட பதற்றம்!
    Featured

    அமெரிக்காவின் புதிய தாக்குதல்.. ஹவுதிகளுக்கு டிரம்ப் வார்னிங்! ஹார்முஸ் ஜலசந்தியில் உச்சக்கட்ட பதற்றம்!

    editor5By editor5July 24, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 18 15
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்கள் மற்றும் மாலுமிகள் மீதான ஈரானின் அச்சுறுத்தலை குறைக்கும் வகையில் அமெரிக்கா தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக ஈரான் அமைத்துள்ள டிரோன் தளங்கள் உள்ளிட்ட முக்கிய இலக்குகளை குறிவைத்து அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. நேற்று இரவு 13-வது நாளாக இந்தத் தாக்குதல்கள் தொடர்ந்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

    உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஈரான் முயற்சித்து வருகிறது. இதற்காக சுங்கக் கட்டணம் வசூலிக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. ஆனால், அமெரிக்கா இந்தப் பகுதியில் முன்பு போர் தொடங்குவதற்கு முந்தைய சுதந்திரமான கப்பல் போக்குவரத்து நிலையை மீட்டெடுக்க விரும்புகிறது.

    ஈரான் இதற்கு சம்மதிக்காததால், கப்பல்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.இந்நிலையில், ஈரான் தரப்பில் ஒரு கடுமையான எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. “எங்களால் எண்ணெய் விநியோகம் செய்ய முடியவில்லை என்றால், எந்த நாடும் செய்ய முடியாது” என அது மிரட்டல் விடுத்துள்ளது. இதனிடையே, ஏமனில் செயல்படும் ஈரான் ஆதரவு ஹவுதி போராளிகள் செங்கடலில் இரண்டு கப்பல்களைத் தாக்கியுள்ளனர். என்செலியா (Encelia) மற்றும் லேய்லா (Layla) என்ற அந்தக் கப்பல்கள் தீப்பிடித்து எரிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழப்பு குறித்த தெளிவான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தத் தாக்குதலுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். “ஹவுதிகள் மீண்டும் தாக்கினால், அவர்களை ஈரானின் பிரதிநிதிகளாகவோ பினாமி அமைப்புகளாகவோ கருதி, ஈரான் மீதும் ஹவுதி மீதும் கடுமையான ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் தெரிவித்தார். பாப் எல்-மண்டெப் (Bab el-Mandeb) ஜலசந்தியையும் ஹவுதிகள் மிரட்டி வருகின்றனர். அரேபிய தீபகற்பத்தின் தெற்கு முனையில் அமைந்த இந்த ஜலசந்தி செங்கடலை ஏடன் வளைகுடாவுடன் இணைக்கும் முக்கியச் சாவடியாகும்.

    உலக வர்த்தகத்தில் சுமார் 12 சதவீதம் இந்த வழியாகவே நடைபெறுகிறது. சவுதி தொடர்பான கப்பல்களை முற்றுகையிடுவோம் என ஹவுதிகள் முன்னதாக அறிவித்திருந்த நிலையில் இந்தத் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. ஹார்முஸ் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை ஏற்கெனவே 100 டாலரைத் தாண்டியுள்ளது. செங்கடல் தாக்குதல்களால் விலை மேலும் உயரும் அபாயம் உள்ளது. உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் இந்தப் பதற்றம் தொடர்ந்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

    America hormuz strait Iran
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதார்மீக பொறுப்புணர்வு!. லால் பகதூர் சாஸ்திரியின் வரலாறும், தர்மேந்திர பிரதானின் ராஜினாமா கோரிக்கையும்!
    Next Article நள்ளிரவில் வெளியான பிரதமர் மோடியின் வீடியோ!. புதிய சாதனை!
    editor5

    Related Posts

    சூடுபிடிக்கும் குதிரை பேரம் வழக்கு..!! நீதிமன்றத்தில் ஆஜரானார் செந்தில் பாலாஜி..!!

    July 24, 2026

    இறுதி வடிவம் பெறும் தமிழக பட்ஜெட்..!! மக்கள் எதிர்பார்க்கும் வாக்குறுதிகள் இடம்பிடிக்குமா?

    July 24, 2026

    கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்..!! சக நோயாளி அடித்துக்கொ*ல..!!

    July 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சூடுபிடிக்கும் குதிரை பேரம் வழக்கு..!! நீதிமன்றத்தில் ஆஜரானார் செந்தில் பாலாஜி..!!

    இறுதி வடிவம் பெறும் தமிழக பட்ஜெட்..!! மக்கள் எதிர்பார்க்கும் வாக்குறுதிகள் இடம்பிடிக்குமா?

    கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்..!! சக நோயாளி அடித்துக்கொ*ல..!!

    தூத்துக்குடி லாக்-அப் மரணம்?. உடற்கூறாய்வு நிறைவு; அருணாச்சலத்தின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

    வரும் 27ம் தேதி.. மாணவர் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க விசிக போராட்டம்.. திருமாவளவன் அறிவிப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.