Close Menu
    What's Hot

    மின்கட்டண உயர்வு திட்டத்தை கைவிடுக – எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

    பக்தர்களை வற்புறுத்தக் கூடாது: பூஜைப் பொருட்கள் விற்பனையில் புதிய கட்டுப்பாடுகள்!

    செய்திகளைப் படியுங்கள்; முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»நடுரோட்டில் கஞ்சா போதை வன்முறை!. திருப்பூரில் அரங்கேறிய கொடூரம்!
    Featured

    நடுரோட்டில் கஞ்சா போதை வன்முறை!. திருப்பூரில் அரங்கேறிய கொடூரம்!

    Editor web3By Editor web3June 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tirupur gancha
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பூரின் மையப் பகுதியான பூச்சக்காடு மாஸ் பேக்கரி சந்திப்பு அருகே, கஞ்சா போதையில் பத்துப்பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒருவரையொருவர் நடுரோட்டில் பயங்கரமாகத் தாக்கிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் 5 லட்சத்திற்கும் அதிகமான வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டு ரயில் மூலம் திருப்பூர் திரும்பும்போது, ரகசியமாக கஞ்சா, குட்கா மற்றும் போதை சாக்லேட்டுகளைக் கடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இவற்றை அவர்கள் பயன்படுத்துவதோடு மட்டுமில்லாமல், பிறருக்கும் விற்பனை செய்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதைத் தடுக்க திருப்பூர் ரயில் நிலையம், மத்திய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் மற்றும் கோவில்வழி பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், பூச்சக்காடு போன்ற உட்புறப் பகுதிகளில் காவல்துறையினரின் ரோந்துப் பணி போதிய அளவில் இல்லை என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கண்காணிப்பு குறைபாட்டினாலேயே, போதை ஆசாமிகள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடுரோட்டில் சண்டையிடும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன

    பூச்சக்காடு பகுதியில் கஞ்சா போதையில் வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது மாநகர காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பகுதியில் போலீஸ் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தினால் மட்டுமே போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாகக் கட்டுப்படுத்த முடியும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Ganja thirupur violence Youths attack
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎம்.எல்.ஏக்களுக்கு 2வது நாளாக பயிற்சி..! சட்டப்பேரவை நடைமுறைகள் குறித்து புத்தாக பயிற்சி வழங்கல்..!
    Next Article திருப்பூர் : வேலை தேடி வந்த பெண்ணுக்கு பாலியல் அத்துமீறல்..! தலைமறைவான ஆசாமிக்கு வலைவீச்சு..!
    Editor web3
    • Website

    Related Posts

    மின்கட்டண உயர்வு திட்டத்தை கைவிடுக – எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

    June 17, 2026

    பக்தர்களை வற்புறுத்தக் கூடாது: பூஜைப் பொருட்கள் விற்பனையில் புதிய கட்டுப்பாடுகள்!

    June 17, 2026

    செய்திகளைப் படியுங்கள்; முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

    June 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மின்கட்டண உயர்வு திட்டத்தை கைவிடுக – எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

    பக்தர்களை வற்புறுத்தக் கூடாது: பூஜைப் பொருட்கள் விற்பனையில் புதிய கட்டுப்பாடுகள்!

    செய்திகளைப் படியுங்கள்; முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

    அதிமுக – தவெக டீலிங் என்னாச்சு? 8 அமைச்சர் பதவிகள் நிஜமா?. கேள்விகளை அடுக்கிய அப்பாவு!

    திருவண்ணாமலையில் அனிருத் சாமி தரிசனம்!. செல்ஃபி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.