சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த தவெக அரசு, தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. பட்ஜெட்டை அமைச்சர்கள் மரிய வில்சன் மற்றும் வினோத் ஆகியோர் தாக்கல் செய்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் பல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தவெக பட்ஜெட் குறித்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ”மடிக்கணினி திட்டம், வீடு கட்டுவதற்கு 5 லட்சமாக நிதி அதிகரித்தது பாராட்டத்தக்கது. தேர்தல் வாக்குறுதிகளை ஆளுங்கட்சி நிறைவேற்ற வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அம்மாவால் கொண்டுவரப்பட்டு, திமுகவால் நிறுத்தப்பட்ட திட்டங்களை தற்போது பட்ஜெட்டில் கொண்டு வந்துள்ளனர்.
மடிக்கணினி திட்டம் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. புதிதாக ஆட்சி வந்துள்ளதால் அவர்களுக்கு நேரம் கொடுக்க வேண்டும். வருகின்ற காலத்தில் வாக்குறுதிகளை ஆளுங்கட்சி நிறைவேற்ற வேண்டும்.
அத்திக்கடைவு அவிநாசி திட்டம் இரண்டு தமிழக வெற்றி கழகம் செயல்படுத்த வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக அதை கிடப்பில் போட்டு விட்டனர். தவெகவில் இணையப் போகிறீர்களா என்ற கேள்வி,
அதிமுகவில் இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா, அதிமுக எங்கள் கட்சி. அந்த மாதிரி கேள்வியே இல்லை.
திமுகவிற்கு ஆதரவு என்ற நிலைப்பாடு போனதால் தான் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். அதிமுக எங்கள் கட்சி எங்களை வளர்த்த கட்சி. தற்போது இருக்கக்கூடிய அரசாங்கம் இப்ப இருக்கும் சூழலில் மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்களை கொண்டு வர வேண்டும்.
கோவை மாவட்டத்தில் 50 ஆண்டுகால வளர்ச்சியை கொடுத்துள்ளோம் திமுக ஆட்சி காலத்தில் ஐந்தாண்டுகளாக கோவையில் எதுவும் செய்யவில்லை.
மீண்டும் வளர்ச்சி வேண்டுமென அத்திக்கடவு அவினாசி திட்டம் இரண்டுக்காக அமைச்சரை சந்தித்தோம்” எனக் கூறினார்.
