Close Menu
    What's Hot

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»முதல்வர் விஜய் செய்தியாளர்களை தவிர்ப்பது ஏன்? – அமைச்சரின் புது விளக்கம்
    Featured

    முதல்வர் விஜய் செய்தியாளர்களை தவிர்ப்பது ஏன்? – அமைச்சரின் புது விளக்கம்

    Editor web2By Editor web2June 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Trichy East Vijay Resigns 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் அமைச்சர் நிர்மல்குமார் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், முதல்வர் செய்தியாளர்களை சந்திக்கவில்லை என்ற விமர்சனத்திற்கு பதிலளித்தார். “முதல்வர் கட்டாயம் செய்தியாளர்களை சந்திக்க வேண்டும் என்ற நடைமுறை எதுவும் இல்லை. கடந்த காலங்களில் சிலர் தங்களது அரசியல் இருப்பை வெளிக்காட்ட தினசரி செய்தியாளர்களை சந்தித்திருக்கலாம். ஆனால், எங்கள் முதல்வர் தினந்தோறும் மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கவனித்து வருகிறார். மக்களுக்குத் தேவையான தகவல்களை உரிய நேரத்தில் தெளிவுபடுத்தி வருகிறோம். செய்தியாளர்களை சந்திப்பதுதான் அரசியலின் அடையாளம் அல்ல” என்று தெரிவித்தார்.

    திருப்பரங்குன்றம் மலை தீபமேற்றும் விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “மக்கள் அமைதியையே விரும்புகிறார்கள். கடந்த ஆண்டுகளாக இருந்த நிலை தொடர வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு. இந்த விவகாரத்தில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. மத உணர்வுகளை தூண்டி அரசியல் செய்ய யாருக்கும் அனுமதி வழங்கப்படாது” என்றார்.

    மின்வாரியத்தில் ஹார்டு டிஸ்க் காணாமல் போன விவகாரம் குறித்து காவல்துறை முழுமையாக விசாரணை நடத்தி வருவதாகவும், விசாரணை முடிவுகள் வெளிவந்த பிறகே உண்மை நிலை தெரியவரும் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார். மேலும், யார் வேண்டுமானாலும் புதிய அரசியல் கட்சி தொடங்க உரிமை உள்ளது என்றும் அவர் கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇன்னும் புதிய உயரங்களை எட்ட வேண்டும்..!! பிரக்ஞானந்தாவிற்கு முதல்வர் விஜய் வாழ்த்து..!!
    Next Article ஆம்னி பேருந்துகளுக்கான கிளாம்பாக்கம் உத்தரவு ரத்து!
    Editor web2
    • Website

    Related Posts

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    June 19, 2026

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    June 19, 2026

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    சாதித்த மாணவர்களுக்காக நேரில் வரப்போகும் முதல்வர் விஜய்..!! விரைவில் தவெக கல்வி விருது விழா..!!

    “மேகதாது தீர்மானத்திற்கெல்லாம் கர்நாடகா பணியாது” – துரைமுருகன் சொல்லும் மாற்று யோசனைகள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.