பாமர மக்களுக்கு உதவி செய்வதற்கான பரிந்துரைகளை ஒருபோதும் புறக்கணிக்க மாட்டேன் , ஜனநாயகத்தில் மக்களே தெய்வம் என திருவாரூரில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டி மாவட்ட கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சரும் திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான பெ. விஸ்வநாதன் பேசினார்..
திருவாரூர் பழையபேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் கூட்டரங்கில் திருவாரூர்மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்டத் தலைவர் நீலன்அசோகன் தலைமையில் காங்கிரஸ் கமிட்டியின் மாநில ,மாவட்ட, நகர, வட்டார நிர்வாகிகள் , இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஒன்றிணைந்து தமிழ்நாடு அரசு உயர்கல்வித்துறை அமைச்சரும் , திருவாரூர்மாவட்ட பொறுப்பு அமைச்சருமான பெ. விஸ்வநாதன் பதவிஏற்று முதன்முறையாக திருவாரூருக்கு வருகை தந்ததற்கு வரவேற்ப்பு அளித்து வெகுவிமர்சையாக பாராட்டுவிழா நடத்தினர் ,
தொடர்ந்து இக்கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் பேசியதாவது –
தமிழ்நாடு அரசின் உயர் கல்வித் துறை அமைச்சர், மதுரை மேலூர் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ, மற்றும் திருவாரூர் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் ஆகிய மூன்று முக்கிய பொறுப்புகளை வகிக்கிறேன் ,
டெல்டா மாவட்டங்களுக்கு தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட 30 சட்டமன்றத் தொகுதிகள் ஒரு படித்த, பதில் சொல்லக்கூடிய அமைச்சர் தேவை என்பதால் முதலமைச்சர் தன்னை இங்கு நியமித்துள்ளர் ,
சென்னையில் உள்ளவர்கள் வேலைவாய்ப்பு மற்றும் இடமாற்றம் கோரி தன்னைச் சந்திக்கும் நிலையில், திருவாரூர் மக்கள் எந்தவித மனுக்களும் இன்றி தன்னை ஒரு அமைச்சராகப் பார்ப்பதையே பெருமையாகக் கருதுகின்றனர் ,
காங்கிரஸ் கட்சியினர் அரசு அதிகாரிகளைச் சந்திக்கும் போது அடக்கம், பணிவு, ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், யாரிடமும் மமதையிலோ அல்லது ஒருமையிலோ பேசக்கூடாது ,
பணிகளைச் செய்வதற்கு ஒரு முறையான நிலையைப் பின்பற்ற வேண்டும். நகர மற்றும் வட்டாரத் தலைவர்கள் திருவாரூர் மாவட்டத் தலைவர் அசோகன் மூலமாகவே அமைச்சரை அணுக வேண்டும் ,இது நிர்வாகக் குழப்பத்தைத் தவிர்க்க உதவும் ,
மற்ற இடங்களில் மக்கள் வேலை வாய்ப்பு மற்றும் இடமாற்றம் போன்ற தனிப்பட்ட கோரிக்கைகளை வைக்கும் நிலையில், திருவாரூர் மக்கள் மட்டும் 60 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சியில் இருப்பதைக் காண்பதே பெருமை ,
லஞ்சமற்ற, ஊழலற்ற புதிய அரசியல் பாதையை உருவாக்க வேண்டும் என்பதே நோக்கம் ,
அதே சமயம், பாமர மக்களுக்கு உதவி செய்வதற்கான பரிந்துரைகளை ஒருபோதும் புறக்கணிக்க மாட்டேன் , ஜனநாயகத்தில் மக்களே தெய்வம் ,
அரசு நிகழ்ச்சிகளுக்கும் மற்றும் தொண்டர்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளுக்கும் தான் ஒரு குடும்ப உறுப்பினராக முன்னின்று வருவேன் என பேசினார் .
