நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதன் மூலம் 3 முக்கிய கடமைகளை மத்திய அரசு செய்யவுள்ளதாக நிதியமைச்சர் உறுதியளித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28-ம் தேதி தொடங்கிய நிலையில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். இதையொட்டி நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், பருவநிலை மாற்றத்தால் ஏற்படப்போகும் பாதிப்புகள் பற்றி சுட்டிக்காட்டப்பட்டன.

இதனிடையே குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசினார். அப்போது, நிர்மலா சீதாராமனுக்கு தயிர், சர்க்கரையை ஊட்டி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வாழ்த்து தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஞாயிறு காலை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும் 2026 – 27ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, மக்களவையில் தாக்கல் செய்தார். தேர்தல் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு சிறப்பு அறிவிப்புகள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அப்போது பேசிய நிதியமைச்சர், மத்திய பட்ஜெட் மூலம் 3 முக்கிய கடமைகளை மத்திய அரசு செய்யவுள்ளதாக உறுதியளித்தார். அதில், வளர்ச்சியின் பலன் அனைத்து தரப்பு மக்களையும் செல்வதை உறுதி செய்கிறோம்.  இரண்டாவதாக, பட்டியலினத்தவர்கள், பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளவர்கள், பெண்கள், இளைஞர்களை உயர்த்தும் பட்ஜெட். மூன்றாவதாக டெக்னாலஜி துறைகளில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் பட்ஜெட்டாக இது அமையும் என அவர் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version