நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம், முக்கிய தேசியப் பிரச்சினைகள் குறித்து பேச அனுமதி மறுப்பு உள்ளிட்ட தொடர்ச்சியான சர்ச்சைகளுக்கு மத்தியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் 2026-2027 நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் போது குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது போது முன்னாள் ராணுவத் தளபதி நரவனேவின் புத்தகத்தை மேற்கோள் காட்டி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சீன ஊடுருவல் விவகாரம் குறித்துப் பேசினார். இதற்கு அமைச்சர்கள் ராஜ்நாத்சிங் மற்றும் அமித்ஷா ஆகியோர் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தனர். இதனையடுத்து, பாஜக எம்பிக்கள் மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்பிக்கள் ராகுல் காந்தியைப் பேசவிடாமல் இடையூறு செய்தனர்.

இருப்பினும் அவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் காகிதங்களை பறக்கவிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதனால் கடந்த (பிப்.6ம் தேதி )எதிர்க்கட்சிகளை சேர்ந்த 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அன்றைய தினம் பிரதமர் மோடி இல்லாமலேயே குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, அன்றைய தினம் மாலை பிரதமர் மோடி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரை அளித்தார். இருப்பினும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இருப்பினும் எதிர்க்கட்சிகள் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியதாக தகவல் வந்ததால், பிரதமரை அவைக்கு வரவேண்டாம் என்று நான் கூறியதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்திருந்தார். இது பொய்யான கூற்று என்று எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்தநிலையில், டெல்லியில் உள்ள ராகுல் காந்தி இல்லத்தில் ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணிக் கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம், முக்கிய தேசியப் பிரச்சினைகள் குறித்து பேச அனுமதி மறுப்பு உள்ளிட்ட தொடர்ச்சியான சர்ச்சைகளுக்கு மத்தியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர விவாதிக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த கூட்டத்தில் திமுக எம்.பி. டி. ஆர் .பாலு உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version