ஆதார் அட்டை இன்று இந்தியாவின் மிக முக்கியமான அடையாள ஆவணமாக மாறிவிட்டது. வங்கிக் கணக்கு துவங்குவது முதல் அரசின் பல்வேறு நலத்திட்டங்களையும் சலுகைகளையும் பெறுவது வரை ஆதார் அட்டை அத்தியாவசியமாக உள்ளது. ஆதார் எண்களைப் பயன்படுத்தி நடைபெறும் மோசடிகளைத் தடுக்கும் பொருட்டு, ஆதார் ஆணையம் (UIDAI) சமீப காலமாக பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

முக்கிய அம்சங்கள்:

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என்ற விதிமுறை இதில் ஒன்றாகும். இது ஆதார் தகவல்களைப் புதுப்பித்து, துல்லியமாக வைத்திருக்க உதவும்.

மேலும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இறந்தவர்களின் ஆதார் எண்களை முடக்குவதற்கான வசதியை ஆதார் ஆணையம் ஏற்படுத்தியுள்ளது. இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள், இறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து, இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த நிலையில், நாடு முழுவதும் இதுவரை 1.20 கோடி ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாக ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களிடமிருந்து பெறப்பட்ட இறந்தவர்களின் பதிவுகளைச் சேகரித்து, இந்த 1.20 கோடி ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களின் ஆதார் எண்கள் முறைகேடுகளுக்குப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே ஆதார் ஆணையம் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version