பாஜக தேசிய தலைவராக நிதின் நபின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜகவின் 11-வது தேசியத் தலைவராக ஜே.பி.நட்டா கடந்த 2020 ஜனவரி 20-ம் தேதி பொறுப்பேற்றார். பதவிக் காலம் முடிந்த போதிலும், சில காரணங்களால் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்தச் சூழலில், பிஹார் மாநில அமைச்சராக இருந்த 45 வயது நிதின் நபின், கட்சியின் செயல் தலைவராக டிசம்பர் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

இதற்கிடையே, கடந்த சில மாதங்களாக பாஜகவில் உள்கட்சித் தேர்தல் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக 12-வது தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜனவரி 20-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நிதின் நபின் ஒருமனதாக பாஜக தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால், இவரது பதவியேற்புக்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு அரசியலில் அனுபவமே இல்லை; கட்சிக்காக உழைத்த திறனுள்ள தலைவர்களை பரிசீலித்திருக்கலாம் என பேச்சு எழுந்துள்ளதாம். என்ன உழைத்தாலும் பலனில்லை என நம்பிக்கை இழந்துள்ள மூத்த தலைவர்கள் நிதின் நபினை தேர்வு செய்தது பிரதமர் மோடி என்பதால் மவுனம் காப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version