வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக உடனடியாக அமல்படுத்தக் கோரி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று (ஜன., 27) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். வங்கிகள் ஒவ்வொரு மாதமும் முதல், 3வது, 5வது சனிக்கிழமைகளில் வேலை நாட்களாக இயங்குகின்றன. இதை மாற்றி, அனைத்து சனி, ஞாயிறு விடுமுறை தினமாக அறிவிக்கக் கோரி வங்கி ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இன்றைய வேலை நிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளின் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
“பொதுத்துறை, வெளிநாட்டு, பிராந்திய கிராமப்புற மற்றும் கூட்டுறவு வங்கிகளைச் சேர்ந்த சுமார் 8 லட்சம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். “ஏற்கனவே வங்கிகளுக்கு தொடர்ச்சியாக மூன்று நாள் விடுமுறை விடப்பட்ட நிலையில் இன்று வேலைநிறுத்தம் நடைபெறுவதால் வங்கி கணக்குகளில் பணத்தை செலுத்துவது எடுப்பது காசோலை மற்றும் ஏடிஎம் சேவைகள் கடுமையாக பாதிக்கும் அபாயம்.
பாரத் ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா, இந்தியன் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளைச் சேர்ந்த ஊழியர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். அதே வேளையில் எச்டிஎப்சி, ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி போன்ற தனியார் வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
