Close Menu
    What's Hot

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»2-ம் வகுப்பு பெட்டிகளிலும் தலையணை, போர்வை: ஜன.1 முதல் 10 ரயில்களில் தெற்கு ரயில்வே அறிமுகம்
    இந்தியா

    2-ம் வகுப்பு பெட்டிகளிலும் தலையணை, போர்வை: ஜன.1 முதல் 10 ரயில்களில் தெற்கு ரயில்வே அறிமுகம்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 30, 2025Updated:November 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    trnss
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ரயில்களில் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் பயணிப்பவர்கள் கட்டண அடிப்படையில் தலையணை, போர்வை பெற்றுக் கொள்ளும் வசதி ஜன.1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

    நீண்டதூர பயணத்துக்கு ரயில் போக்குவரத்தையே மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். விரைவான, பாதுகாப்பான பயணம், கட்டணம் குறைவு போன்ற காரணங்களால் ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. விரைவு ரயில்களை பொருத்தவரை, ஏ.சி. பெட்டிகளில் பயணம் செய்பவர்களுக்கு மட்டுமே போர்வை, தலையணை வழங்கப்படுகிறது.

    இதற்கிடையே, 2-ம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் பயணம் செய்பவர்களுக்கும் போர்வை, தலையணை வழங்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது.

    இந்நிலையில், 2-ம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் கட்டணம் செலுத்தி போர்வை, தலையணை பெற்றுக் கொள்ளும் வசதியை சென்னை கோட்டத்தில் தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. முதல் கட்டமாக, சென்னையில் இருந்து செல்லும் நீலகிரி, மங்களூரு, திருச்செந்தூர், சிலம்பு, திருவனந்தபுரம், ஆலப்புழா அதிவிரைவு ரயில்கள், மன்னார்குடி, பாலக்காடு, மங்களூரு விரைவு ரயில்கள், தாம்பரம் – நாகர்கோவில் அதிவிரைவு ரயில் ஆகிய 10 ரயில்களில் 2026 ஜனவரி 1-ம் தேதி முதல் இத்திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ் தலையணை மட்டும் பெற ரூ.30, போர்வை மட்டும் பெற ரூ.20, இரண்டையும் பெற ரூ.50 கட்டணமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. பயணிகள் தங்களுக்கு தேவையானதை ரயில் பெட்டிகளில் உள்ள ஊழியர்களிடம் க்யூஆர் குறியீடு மூலம் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். போர்வைகளை கொள்முதல் செய்வது, ரயிலில் ஏற்றி விநியோகம் செய்வது, தொடர்ந்து சுத்தம் செய்வது ஆகிய பணிகளை ரயில்வே ஒப்பந்ததாரர் மேற்கொள்வார். இந்த 10 ரயில்களில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும்.

    இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியபோது, ‘‘சென்னை ரயில்வே கோட்டம் கடந்த 2023-24-ம் ஆண்டில் கட்டணமில்லா வருவாய் திட்டத்தின்கீழ் ஒரு முன்னோடி திட்டத்தை செயல்படுத்தியது. இதற்கு பயணிகளிடம் அமோக வரவேற்பு கிடைத்ததால், ரயில்வே நிர்வாகம் இதை ஒரு நிரந்தர ‘கட்டணமில்லா வருவாய் திட்டமாக அறிமுகம் செய்கிறது. இதனால், பயணிகளின் வசதி மேம்படுத்தப்படும். ரயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். இதன்மூலம் ரயில்வேக்கு உரிமைக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.28.28 லட்சம் கிடைக்கும்’’ என்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஐயப்ப பக்தர்கள் ஜாக்கிரதை.. சபரிமலையில் இதுவரை 65 பாம்புகள் சிக்கின
    Next Article BREAKING: தொடர் ரன்மழை… 52வது சதம் விளாசினார் கோலி
    Editor TN Talks

    Related Posts

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    December 26, 2025

    2025ல் இந்தியாவில் அதிகம் பாதித்த நோய்கள்!. என்னென்ன தெரியுமா?.

    December 26, 2025

    அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும்: பிரதமர் மோடி உறுதி

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    Trending Posts

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    December 27, 2025

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    December 27, 2025

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    December 26, 2025

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    December 26, 2025

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    December 26, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.