Close Menu
    What's Hot

    3வது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா!

    திமுக- அதிமுக கூட்டணி வைத்தால் என்ன தவறு? ஆர்.எஸ்.பாரதி அதிரடி!

    சேப்பாக்கத்தில் மிரட்டிய இந்திய பந்துவீச்சு! 218 ரன்களில் சுருண்டது ஆப்கானிஸ்தான்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»ஐயப்ப பக்தர்கள் ஜாக்கிரதை.. சபரிமலையில் இதுவரை 65 பாம்புகள் சிக்கின
    இந்தியா

    ஐயப்ப பக்தர்கள் ஜாக்கிரதை.. சபரிமலையில் இதுவரை 65 பாம்புகள் சிக்கின

    Editor TN TalksBy Editor TN TalksNovember 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    snkk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சபரிமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து இதுவரை 65 பாம்புகள் பிடிக்கப்பட்டு, வனப்பகுதிக்குள் விடப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    கேரளா மாநிலம் தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகத்தின் 18 மலைகள் புடை சூழ அமைந்துள்ளது சபரிமலை ஐயப்பன் கோயில். இதை சுற்றி எல்லாப் பாதைகளுமே காடுகளுக்குள் அமைந்துள்ளதால் பாம்பு, புலி, யானை போன்ற விலங்குகள் பக்தர்களை தாக்கும் அபாயம் உள்ளது. இதனால், வன விலங்குகளிடம் இருந்து ஐயப்ப பக்தர்களை பாதுகாப்பதில் வனத்துறை முக்கிய பங்கு வகித்து வருகிறது.

    மேலும், பெரிய வழிப்பாதையில் அவசர சிகிச்சை மையம், மருத்துவமனை என வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அழுதை முதல் பம்பை வரை குடிநீர், கழிவறை மற்றும் பக்தர்களுக்கு தங்கும் வசதி ஆகியவற்றை செய்து கொடுத்துள்ளது.

    இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களை, பாம்புகளில் இருந்து பாதுகாக்க 12 சான்றளிக்கப்பட்ட பாம்பு பிடி வீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவியாக வனத்தை பற்றி நன்கறிந்த பழங்குடியினர் மற்றும் வனத்துறையை சேர்ந்த 60 நபர்கள் பாம்பு பிடிக்கும் குழுவில் உள்ளனர்.

    இந்த குழுவினர், மண்டல – மகரவிளக்கு பூஜை காலத்திற்காக நடை திறக்கப்பட்ட நவம்பர் 16 ஆம் தேதி முதல் தற்போது வரை சபரிமலை, பம்பை, நிலக்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சுமார் 65 பாம்புகளைப் பிடித்த வனத்துறையினர், அவற்றை அடர்ந்த வனத்திற்குள் விட்டுள்ளனர். அதில் 16 சேரை, 11 விரியன், 8 நாகப் பாம்புகள் அடங்கும். ஆகையால், சபரிமலைக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பாக வருமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    மேலும், பம்பையில் இயங்கும் உதவி வனப் பாதுகாவலர் தலைமையிலான சிறப்பு கட்டுப்பாட்டு அறை மூலம், சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் நடவடிக்கைகள் வனத்துறையால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆட்டம் முழுக்க ஒரே கோல் மழைதான் போங்க – ஓமனை ஊதித் தள்ளியது இந்தியா
    Next Article 2-ம் வகுப்பு பெட்டிகளிலும் தலையணை, போர்வை: ஜன.1 முதல் 10 ரயில்களில் தெற்கு ரயில்வே அறிமுகம்
    Editor TN Talks

    Related Posts

    ‘பூர்வோதய’ பாதையில் வடகிழக்கின் வளர்ச்சி..!! ஒடிசாவில் பிரதமர் மோடி பெருமிதம்..!!

    June 20, 2026

    கட்டண தகராறு!. சுங்கச்சாவடி ஊழியரை 12 கி.மீ இழுத்து சென்ற கார்!. மே.வங்கத்தில் அதிர்ச்சி!

    June 20, 2026

    பிரதமர் மோடியின் 12 ஆண்டு சாதனை..!! பிரகதி பாத யாத்திரையில் புதுவை துணைநிலை ஆளுநர் பயணம்..!!

    June 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    3வது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா!

    திமுக- அதிமுக கூட்டணி வைத்தால் என்ன தவறு? ஆர்.எஸ்.பாரதி அதிரடி!

    சேப்பாக்கத்தில் மிரட்டிய இந்திய பந்துவீச்சு! 218 ரன்களில் சுருண்டது ஆப்கானிஸ்தான்!

    நீட் தேர்வு தேவையில்லை; மாணவர்களுக்காக மனம் திட்டம் – அமைச்சர் அருண்ராஜ்

    தவறுகளை மறைக்க புது பிரச்சனைகளை திமுக உருவாக்குகிறது – அமைச்சர் விஜய்பாலாஜி குற்றச்சாட்டு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.