நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால், மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல், பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆகிய விவகாரங்களை விவாதிக்க எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

அதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அதேவேளை பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடர்பாக விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

வாரவிடுமுறைக்கு பிறகு இன்று காலை 11 மணிக்கு மீண்டும் மக்களவை கூடியது. அப்போது பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடர்பாக விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டார். இதனால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதேப் போல, மாநிலங்களை கூடியதும், மறைந்த ஜார்க்கண்ட் முன்னள் முதலமைச்சர் ஷிபு சோரன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version