நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் நாடு முழுவதும் நடைபெற்ற தீவிரப் போராட்டங்களை அடுத்து, மத்தியக் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகிய தர்மேந்திர பிரதான், நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள வந்தபோது காங்கிரஸாரை விமர்சித்து பேசியுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தின் நடைபாதையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷை சந்தித்துப் பேசியபோது, அவரது பதவி விலகல் குறித்து ஜெய்ராம் ரமேஷ் “இதுபோன்று நடப்பது வழக்தான்” என்று குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பதிலளித்த தர்மேந்திர பிரதான், “எதுவும் நடக்கவில்லை. நான் ஒரு வீதிச் சண்டைக்காரன், ஏசி அறையில் உட்கார்ந்து போராட்டம் நடத்தும் போராளி அல்ல” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
முன்னதாக, மாணவர்களின் எதிர்காலம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டைக் கருத்தில்கொண்டு, தன் மீது எந்தத் தனிப்பட்ட குற்றச்சாட்டுகளும் இல்லாத நிலையிலும் தாமாக முன்வந்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக அவர் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பதவியிலிருந்து விலகிய போதிலும், தன் அரசியல் மீதான நம்பிக்கையும் உறுதியும் குறையவில்லை என்பதை உணர்த்தும் வகையில் அவரது இந்தப் பேச்சு தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.
