Close Menu
    What's Hot

    இ-சேவை, ஆதார் சேவை மையங்களுக்கு 2 நாள்கள் விடுமுறை!

    சாதிவாரி சர்வே நடத்த தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லையா? அன்புமணி

    தலைமை காவலரை கத்தியுடன் விரட்டிய இளைஞர்; கோவில் விழாவில் பரபரப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»அரசியல் கட்சிகளின் முகவர்கள் தினசரி 10 எஸ்ஐஆர் படிவங்களை சமர்ப்பிக்கலாம்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு
    இந்தியா

    அரசியல் கட்சிகளின் முகவர்கள் தினசரி 10 எஸ்ஐஆர் படிவங்களை சமர்ப்பிக்கலாம்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 31, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tamilnadu SIR
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் நாள்தோறும் அதிகபட்சம் 10 எண்ணிக்கையிலான நிரப்பப்பட்ட SIR படிவங்களைப் பெற்று, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்ப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் டிசம்பர் 19 முதல் ஜனவரி 18 வரை தாக்கல் செய்யப்பட்டு, அதே காலகட்டத்திற்குள் பரிசீலித்து முடிவு செய்யப்படும்.

    ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலத்தில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத குடிமக்கள் மற்றும் 18 வயது நிரம்பிய தகுதியுடைய குடிமக்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம். இந்த தீவிர திருத்த செயல்பாட்டினை வெற்றிகரமாக மேற்கொண்டு முடிக்க, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களின் பங்கானது இன்றியமையாதது.

    அரசியல் கட்சிகளின் முழுமையான பங்களிப்பினை உறுதிசெய்யும் வகையில், இந்திய தேர்தல் ஆணையம் தனது அக்.27 நாளிட்ட 23/2025-ERS (Vol II) எண்ணிட்ட கடிதத்தில் தெரிவித்துள்ள வழிகாட்டுதல்களின்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டிற்குப் பிறகு, நாள்தோறும் அதிகபட்சம் 10 எண்ணிக்கையிலான நிரப்பப்பட்ட படிவங்களை பெற்று வழங்க அனுமதி அளித்துள்ளது.

    அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் நாள்தோறும் அதிகபட்சம் 10 எண்ணிக்கையிலான நிரப்பப்பட்ட படிவங்களைப் பெற்று, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்ப்பிக்கலாம். அவ்வாறு படிவங்களை சமர்ப்பிக்கும் போது வாக்குச்சாவடி நிலை முகவர்கள் அந்த படிவங்களில் உள்ள விவரங்கள் ‘தன்னால் சரிபார்க்கப்பட்டு திருப்தி அடையப்பட்டது’ என்ற உறுதிமொழியினையும் வழங்க வேண்டும்.

    அவ்வாறு பெறப்படும் படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் சரிபார்த்து, அவற்றை டிஜிட்டல் வடிவமாக தொடர்புடைய உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது வாக்காளர் பதிவு அலுவலருக்கு சமர்ப்பிப்பார்கள். வாக்காளர் பதிவு அலுவலர் அப்படிவங்களை ஆய்வு செய்து, தேவைக்கேற்ப பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வார்,’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாதலியை மணக்கிறார் பிரியங்கா மகன் ரெஹான்: ராஜஸ்தானில் இன்று நிச்சயத்தார்த்தம்
    Next Article தலைமை காவலரை கத்தியுடன் விரட்டிய இளைஞர்; கோவில் விழாவில் பரபரப்பு
    Editor TN Talks

    Related Posts

    காதலியை மணக்கிறார் பிரியங்கா மகன் ரெஹான்: ராஜஸ்தானில் இன்று நிச்சயத்தார்த்தம்

    December 31, 2025

    பாலியல் வன்கொடுமை வழக்கு: தேவகவுடாவின் மகன் ரேவண்ணா விடுவிப்பு

    December 31, 2025

    ரயில்ஒன் செயலியில் டிக்கெட் எடுத்தால் 3 சதவீதம் தள்ளுபடி

    December 31, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இ-சேவை, ஆதார் சேவை மையங்களுக்கு 2 நாள்கள் விடுமுறை!

    சாதிவாரி சர்வே நடத்த தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லையா? அன்புமணி

    தலைமை காவலரை கத்தியுடன் விரட்டிய இளைஞர்; கோவில் விழாவில் பரபரப்பு

    அரசியல் கட்சிகளின் முகவர்கள் தினசரி 10 எஸ்ஐஆர் படிவங்களை சமர்ப்பிக்கலாம்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு

    காதலியை மணக்கிறார் பிரியங்கா மகன் ரெஹான்: ராஜஸ்தானில் இன்று நிச்சயத்தார்த்தம்

    Trending Posts

    பழவூர் அருகே மாநில மின்னொளி கபடி போட்டி

    December 31, 2025

    இ-சேவை, ஆதார் சேவை மையங்களுக்கு 2 நாள்கள் விடுமுறை!

    December 31, 2025

    சாதிவாரி சர்வே நடத்த தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லையா? அன்புமணி

    December 31, 2025

    தலைமை காவலரை கத்தியுடன் விரட்டிய இளைஞர்; கோவில் விழாவில் பரபரப்பு

    December 31, 2025

    காதலியை மணக்கிறார் பிரியங்கா மகன் ரெஹான்: ராஜஸ்தானில் இன்று நிச்சயத்தார்த்தம்

    December 31, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.