Close Menu
    What's Hot

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    உச்சத்தில் உட்கட்சி பூசல்!. மாணிக்கம் தாகூர் பெரிய ஆளா?. செல்வப்பெருந்தகை காட்டம்!

    10ம் வகுப்புத் தேர்வு எழுத மாட்டார் வைபவ் சூர்யவன்ஷி!. அவரது தந்தை சொன்ன தகவல்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»கன்னட ஆட்டோ ஓட்டுநரை செருப்பால் அடித்த இந்தி பெண்… எதிர்ப்பை அடுத்து காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு கதறல்..
    இந்தியா

    கன்னட ஆட்டோ ஓட்டுநரை செருப்பால் அடித்த இந்தி பெண்… எதிர்ப்பை அடுத்து காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு கதறல்..

    Editor TN TalksBy Editor TN TalksJune 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2025 06 02 at 12.58.59 PM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கர்நாடகாவில் சமீபகாலமாக கன்னட மொழி பேச மறுத்து இந்தியில் தான் பேசுவோம் என்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இது பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்டு வருகிறது. அப்படியான ஒரு சம்பவம் தான் இது..

    கர்நாடக தலைநகர் பெங்களூரின் பெல்லந்தூர் பகுதியில் ஆட்டோ ஒன்றும், இருசக்கர வாகனம் ஒன்றும் போக்குவரத்து நெரிசலின் போது உரசிக் கொண்டன. இதையடுத்து பைக்கில் வந்த அந்த இளம்பெண், ஆட்டோ ஓட்டுநரை இந்தி மொழியில் சகட்டு மேனிக்கு அர்ச்சித்துள்ளார். ஆனால் அந்த இளம்பெண்தான் போக்குவரத்து விதிகளை மீறி எதிர்திசையில் வந்து ஆட்டோ மீது மோதியதாக அந்த ஓட்டுநர் எடுத்துக் கூறியும் கேளாமல் அவர் திட்டிக் கொண்டே இருந்துள்ளார். இதனை ஆட்டோ ஓட்டுநர் தனது மொபைல் போனில் படம்பிடிக்க, ஆத்திரமடைந்த அந்த பெண் தனது செருப்பைக் கழட்டி அவரை சரமாரியாக தாக்கினார். இதுவும் அந்த மொபைல் காட்சியில் பதிவானது. கன்னடத்தில் இவர் பதில் கூற, அந்த பெண் இந்தியிலேயே திட்டிக் கொண்டும், செருப்பால் அடித்துக் கொண்டும் இருந்தார். இதனை ஆட்டோவில் இருந்த பயணிகள் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினர். இது வைரலாக பரவியது.

    இதுபற்றி காவல்நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் புகாரளித்தார். வீடியோ காட்சிகள் அடிப்படையில் அந்த வடமாநில பெண் மீது தான் தவறு என்று போலீசார் உறுதி செய்தனர். இதுதொடர்பாக அந்த பெண் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அப்போது ஆட்டோ ஓட்டுநரின் காலில் விழுந்து அந்த பெண்ணும், அவரது கணவரும் மன்னிப்புக் கோரினர். இந்த காட்சிகளும் வைரலாகின.

    பெங்களூரில் கன்னடர்களை வடமாநிலத்தவர் தரம்தாழ்ந்து நடத்துவதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் சமீபமாக அதிகரித்துள்ளது. மொழி விவகாரத்தில் தமிழர்களைப் போன்று கொள்கைப்பிடிப்புடன் இருக்க வேண்டும் என்று கன்னட அமைப்புகள் தற்போது மேற்கோள் காட்டி வருகின்றன.

    Apology Video Auto Driver Abuse Auto Driver Assault Footwear Attack Incident Hindi Woman Kannada Auto Driver Karnataka News Language Issue India Public Apology Social Media Outrage Viral Incident India Viral Video ஆட்டோ ஓட்டுனர் இணையத்தில் கண்டனம் இந்தி-கன்னட விவகாரம் சமூக வன்முறை செருப்பால் அடித்த விசாரணை மன்னிப்பு
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுதுப் படங்களில் ஏன் இளையராஜா பாடல்களை வைக்கிறார்கள்? என்ன செய்துவிட்டார் ராஜா!
    Next Article தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு..
    Editor TN Talks

    Related Posts

    காங்கிரசை ‘கை’ கழுவிய மூத்த தலைவர்!.  அடுத்த விக்கெட் காலி!. தேசிய அளவில் பரபரப்பு!

    February 16, 2026

    SIR பணிகளில் குளறுபடி!. 7 அதிகாரிகள் சஸ்பெண்ட்!. மம்தா பானர்ஜிக்கு ஷாக்!

    February 16, 2026

    ”ஒவ்வொரு ரன் போலதான் ஒவ்வொரு ஓட்டும்”!. இந்தியாவின் வெற்றியை பிரச்சாரமாக மாற்றிய தேர்தல் ஆணையம்!.

    February 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    உச்சத்தில் உட்கட்சி பூசல்!. மாணிக்கம் தாகூர் பெரிய ஆளா?. செல்வப்பெருந்தகை காட்டம்!

    10ம் வகுப்புத் தேர்வு எழுத மாட்டார் வைபவ் சூர்யவன்ஷி!. அவரது தந்தை சொன்ன தகவல்!.

    இந்தியாவுக்கு எதிரான தோல்வி!. கோபத்தில் டிவியை உடைக்கும் பாக்., ரசிகர்!. வீடியோ வைரல்!.

    “தகுதியற்றவரிடம் பொறுப்பு கொடுத்தால், நாட்டையே அழித்துவிடுவார்”!.  சோயிக் அக்தர் ஆத்திரம்!.

    Trending Posts

    “இப்படியொரு அருவருப்பான கருத்தை எதிர்பார்க்கவில்லை”!. த்ரிஷா பரபரப்பு அறிக்கை!

    February 16, 2026

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    February 16, 2026

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    February 16, 2026

    உச்சத்தில் உட்கட்சி பூசல்!. மாணிக்கம் தாகூர் பெரிய ஆளா?. செல்வப்பெருந்தகை காட்டம்!

    February 16, 2026

    10ம் வகுப்புத் தேர்வு எழுத மாட்டார் வைபவ் சூர்யவன்ஷி!. அவரது தந்தை சொன்ன தகவல்!.

    February 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.