இண்டிகோ பெரிய அளவிலான விமான ரத்துகள் மற்றும் செயல்பாட்டு இடையூறுகளை எதிர்கொண்டுள்ள நிலையில், விமானப் போக்குவரத்துத் துறையில் மத்திய அரசு “ஏகபோக மாதிரியை” செயல்படுத்துவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 2 நாட்களாக இண்டிகோ விமானங்கள் பெருமளவில் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வியாழக்கிழமை 550 விமானங்களையும், வெள்ளிக்கிழமை 400 விமானங்களையும் விமான நிறுவனம் ரத்து செய்திருந்தது. இந்த சம்பவம் அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் “இந்த அரசாங்கத்தின் ”ஏகபோக முறை” பொருளாதாரக் கொள்கைகளின் விளைவே இண்டிகோவின் படுதோல்விக்கு காரணம் என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
சமூக ஊடக தளமான ‘எக்ஸ் தளத்தில் ஒரு செய்தித்தாள் கட்டுரையைப் பகிர்ந்து கொண்ட ராகுல் காந்தி, மீண்டும் ஒருமுறை, தாமதங்கள், ரத்துசெய்தல்கள் மற்றும் உதவியற்ற தன்மைக்கு சாதாரண இந்தியர்கள்தான் அதிக விலை கொடுக்கின்றனர். மேலும், ஒவ்வொரு துறையிலும் நியாயமான போட்டிக்கு இந்தியா தகுதியானது, மேட்ச் பிக்சிங் போன்ற ஏகபோகங்களுக்கு அல்ல” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் நிறுவனங்கள் இனி மக்களுக்குச் சொந்தமானவை அல்ல, மாறாக இந்த ஏகபோகக் குழுக்களுக்கு சேவை செய்வதாகத் தெரிகிறது என்று குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, மில்லியன் கணக்கான சிறு வணிகங்கள் சரிந்து வருகின்றன, மேலும் நாடு வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை. இந்தியாவின் வணிக சமூகத்தைப் பற்றி, தொலைபேசியில் பேசக்கூட அவர்கள் பயப்படுகிறார்கள் என்று கூறினார்.
ஒரு ஏகபோகக் குழுவும் அரசாங்கமும் கூட்டாக தங்கள் துறையை ஆக்கிரமித்து, ஐடி, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை சோதனைகள் அல்லது மூலதனம் நிறுத்தி வைக்கப்படும் அல்லது விதிமுறைகளில் மாற்றங்கள் மூலம் திடீர் தாக்குதல்கள் ஏற்படும் என்ற பயம் காரணமாக தங்கள் வணிகங்களை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். இருப்பினும், சில தொழிலதிபர்கள் மற்றும் நிறுவனங்களை மேற்கோள் காட்டி, அவர்கள் நேர்மையுடன் செயல்படுவதாகக் கூறினார். ஏகபோகங்கள் இல்லாவிட்டாலும் இந்தியாவில் மிகப்பெரிய வெற்றி சாத்தியம் என்பதை இந்த நிறுவனங்கள் நிரூபிக்கின்றன என்று ராகுல் காந்தி கூறினார்.
