இந்திய இலக்கிய உலகிற்கு வழங்கப்படும் மிக உயரிய விருதானஞானபீட விருது‘, பிரபல திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்துவுக்கு டெல்லியில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் வழங்கப்பட்டது.

இந்திய அளவில் இலக்கியப் பங்களிப்பிற்காக வழங்கப்படும் மிக உயரிய விருதாக ஞானபீட விருது கருதப்படுகிறது. தமிழில் இதற்கு முன்னதாக 1975-ம் ஆண்டு எழுத்தாளர் அகிலனுக்கும் (சித்திரப்பாவை நாவல்), 2002-ம் ஆண்டு எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கும் இவ்விருது வழங்கப்பட்டது. அதன்பிறகு, சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது 3-வது தமிழ் ஆளுமையாகக் கவிஞர் வைரமுத்து ஞானபீட விருது வழங்கப்பட்டுள்ளது.

கவிஞர் வைரமுத்துவின் 73-வது பிறந்தநாளான நேற்று (ஜூலை 13), டெல்லியில் நடைபெற்ற விழாவில் முன்னாள் மத்திய அமைச்சரும், இலக்கியவாதியுமான கரண் சிங், வைரமுத்துவுக்கு இந்த விருதை வழங்கி கௌரவித்தார். இந்த உயரிய விருதுடன் ரூ.11 லட்சம் பொற்கிழி, பாராட்டுப் பத்திரம் மற்றும் ஞானத்தின் தேவதையான வாக்தேவியின் வெண்கலச் சிலையும் அவருக்கு வழங்கப்பட்டது. கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டதை அடுத்து, தமிழக முதலமைச்சர் மு..ஸ்டாலின், திரையுலகப் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

கவிஞர் வைரமுத்து 7 முறை சிறந்த திரையிசைப் பாடலாசிரியருக்கான தேசிய விருது, சாகித்திய அகாடமி விருது (கள்ளிக்காட்டு இதிகாசம்), பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் உள்ளிட்ட பல உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version