Close Menu
    What's Hot

    3-வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 388 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து

    கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற ஈரோடு மாணவர்கள்… கறி விருந்து கொடுத்த நடிகர் ஜீவா

    சென்னையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து…  20 பேர் பாதுகாப்பாக மீட்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பதவியேற்பு!
    இந்தியா

    உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பதவியேற்பு!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 24, 2025Updated:November 24, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    SC
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பதவியேற்றார்.

    உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த பி.ஆர்.கவாய் கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ. 23) மாலையுடன் ஓய்வு பெற்றார். முன்னதாக கடந்த உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் கடந்த அக்டோபர் 30ம் தேதி  நியமிக்கப்பட்டார். இந்தநிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சூர்ய காந்த்திற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    அடுத்த 15 மாதங்கள் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பதவியில் நீடிப்பார். 2027ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி அவர் ஓய்வு பெற உள்ளார்.

    ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்பு சட்டப்பிரிவு 370 நீக்கம், பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம், பெகாசஸ் உளவு மென்பொருள் வழக்கு உள்ளிட்ட பல முக்கிய தீர்ப்புகளை வழங்கிய அமர்வுகளில் நீதிபதி சூர்ய காந்த் இடம்பெற்றுள்ளார். மேலும், பேச்சு சுதந்திரம், ஜனநாயகம், ஊழல், சுற்றுச்சூழல், பாலின சமத்துவம் உள்ளிட்ட பல்வேறு குறிப்பிடத்தக்க தீர்ப்புகளை சூர்ய காந்த் வழங்கி உள்ளார். குறிப்பாக சட்டப்பேரவைகளால் நிறைவேற்றப்படும் மசோக்கள் குறித்து குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநரின் அதிகாரங்கள் குறித்த வழக்கை விசாரிக்கும் அரசமைப்பு அமர்வு நீதிபதி சூர்ய காந்த் இடம்பெற்றிருந்தார்.

    அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் 1962ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி பிறந்த சூர்ய காந்த், சட்டம் படித்து வழக்கறிஞராக பணியை தொடங்கிய அவர், பஞ்சாப், அரியானா உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி உள்ளார். கடந்த 2018ல் இமாச்சலபிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் நியமிக்கப்பட்டார். இந்தநிலையில், 2019 மே மாதம் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக அவர் பதவியேற்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகார்த்திகை தீபத்திருவிழா விமர்சையாக கொடியேற்றம்!- விழாக்கோலம் பூண்டது திருவண்ணாமலை
    Next Article ‘ரஷ்யா- உக்ரைன் போர் நிறுத்த சமாதான திட்டத்தில் திருத்தம் வேண்டும்!’
    Editor TN Talks

    Related Posts

    3-வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 388 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து

    July 19, 2026

    சென்னையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து…  20 பேர் பாதுகாப்பாக மீட்பு

    July 19, 2026

    தேசிய விருது பெற்ற மம்மூட்டி, தனுஷ் கேக் வெட்டிக் கொண்டாட்டம் – ஓம் படப்பிடிப்பில் உற்சாகம்

    July 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    3-வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 388 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து

    கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற ஈரோடு மாணவர்கள்… கறி விருந்து கொடுத்த நடிகர் ஜீவா

    சென்னையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து…  20 பேர் பாதுகாப்பாக மீட்பு

    தேசிய விருது பெற்ற மம்மூட்டி, தனுஷ் கேக் வெட்டிக் கொண்டாட்டம் – ஓம் படப்பிடிப்பில் உற்சாகம்

    தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராக பட்டுக்கோட்டை பிரபாகர் தேர்வு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.