பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு பதிலடியாக, மே 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இந்திய விமானப்படை பாகிஸ்தானின் முக்கிய ராணுவ விமான தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

தாக்கம் பெற்ற முக்கிய தளங்கள்:

நூர் கான் விமான தளம் (ராவல்பிண்டி): கட்டிடம் ஒன்று தீவிர சேதம் அடைந்துள்ளது.

சுக்குர் விமான தளம் (சிந்து): ஒரு கட்டிடம் சேதமடைந்துள்ளது.

ரகிம் யார் கான் விமான தளம் (பஞ்சாப்): தாக்குதலுக்கு உள்ளானது.

முசாப் விமான தளம் (சர்கோதா): ஓடுபாதையில் பாதிப்பு.

சாபாஷ் ஜேக்கோபாபாத் விமான தளம் (வடக்கு சிந்து): கட்டிடம் சேதம்.

போலாரி விமான தளம் (தட்டா): தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பஸ்ரூர் மற்றும் சியால்கோட் விமான தளங்கள்: ரேடார் மையங்கள் மற்றும் ஆயுத கிடங்குகள் சேதமடைந்துள்ளன.

இந்த தாக்குதல்களை உறுதிப்படுத்தும் செயற்கைக்கோள் படங்களை அமெரிக்காவை சேர்ந்த மெக்ஸார் டெக்னாலஜிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங், சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்த நடவடிக்கையை உறுதி செய்தார். இந்த தாக்குதல்கள், இந்தியா – பாகிஸ்தான் உறவுகளில் பதற்றம் நிலவுவதைக் காட்டுகின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version