மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை மத்தியில் ஆளும் பிரதமர் மோடி அரசு, ஒரே நாளில் அழித்து விட்டதாக மக்களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறிய​தாவது:

விபி-ஜி ராம் ஜி மசோதா என்​பது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை​வாய்ப்பு உறுதி திட்​டத்​தின் மறுசீரமைப்​போ மாற்​றோ அல்ல. அந்த சட்​டம் கிராமங்​களுக்கு எதி​ரானது. இரு​பது ஆண்டு கால​மாக அமலில் இருந்த மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்​டத்தை மோடி அரசு ஒரே நாளில் அழித்​து​விட்​டது.

இந்த திட்​டம், உரிமை​கள் அடிப்​படையி​லான, தேவை சார்ந்த உத்​தர​வாதத்தை அழித்து கட்​டுப்​படுத்​தப்​படும் பங்​கீட்டு திட்​ட​மாக மாற்​றப்​பட்​டுள்​ளது. அதன் வடிவ​மைப்பே மாநிலங்​கள் மற்​றும் கிராமங்​களுக்கு எதி​ரானது.

மகாத்மா காந்தி வேலை உறுதி திட்​டம் கிராமப்​புற தொழிலா​ளர்​களுக்கு பேரம் பேசும் சக்​தியை வழங்​கியது. கிராமப்​புற உள்​கட்​டமைப்​பு​கள் புத்​து​யிர் பெற்​றன. அந்த செல்​வாக்​கைத்​தான் மோடி அரசு உடைக்க விரும்​பு​கிறது.

மத்​திய அரசு உரு​வாக்​கி​யுள்ள புதிய விபி-ஜி ராம் ஜி மசோதா வேலைக்கு வரம்பு விதித்​து, அதை மறுப்​ப​தற்கு மேலும் பல வழிகளை உரு​வாக்​கு​வதன் மூலம் கிராமப்​புற ஏழைகளிடம் இருந்த ஒரே ஒரு ஆயுதத்​தை​யும் பறித்து பலவீனப்​படுத்​துகிறது.

இவ்​வாறு ராகுல்​ காந்​தி கூறி​னார்​.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version