Close Menu
    What's Hot

    ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியீடு!

    ‘ஜனநாயகன்’ வெளியாவதில் சிக்கல்..? காரணம் என்ன?

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»முப்படைத் தளபதிகளுடன் ராஜ்நாத் சிங்.. உளவுத்துறை அதிகாரிகளுடன் அமித் ஷா..
    இந்தியா

    முப்படைத் தளபதிகளுடன் ராஜ்நாத் சிங்.. உளவுத்துறை அதிகாரிகளுடன் அமித் ஷா..

    Editor TN TalksBy Editor TN TalksMay 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2025 05 09 at 4.19.55 PM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், முப்படைத் தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை நடத்தி உள்ளார். இதேபோன்று உளவுத்துறை, எல்லைப் பாதுகாப்புப் படை, தொழில் பாதுகாப்புப் படை இயக்குநர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார்.

    WhatsApp Image 2025 05 09 at 4.19.55 PM 1

    கடந்த ஏப்ரல் மாதம் 22-ந் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 அப்பாவிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த 7-ந் தேதி நள்ளிரவு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள் நிலைகள் மீது இந்திய ராணுவத்தினர் துல்லிய தாக்குதல் மேற்கொண்டனர். நள்ளிரவில் 25 நிமிடங்கள் நீடித்த இந்த வேட்டையில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளும், அவர்களது உறவினர்களும் கொல்லப்பட்டனர். வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. ஆபரேஷன் சிந்தூர் என்று இந்த தாக்குதலுக்கு பெயரிடப்பட்டது.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜம்முகாஷ்மீர் பகுதியில் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள குப்வாரா, உரி, பூஞ்ச் ஆகிய இடங்களில் பாகிஸ்தான் தாக்குதல் மேற்கொண்டது. இதில் பொதுமக்கள் சிலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. வான்வழி தாக்குதலின் ஒருபகுதியாக ட்ரோன் தாக்குதல்களை இந்தியாவும் பாகிஸ்தானும் மேற்கொண்டு வருகின்றன. தொடர்ந்து இருதரப்பிலும் தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில் டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாதுகாப்புத்துறை தலைவர் ஜெனரல் அனில் சௌகான், ராணுவத் தலைமைத் தளபதில் உபேந்திர திவேதி, கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி, விமானப்படை ஏர் சீப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் ஆகியோர் பங்கேற்றனர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

    இதனிடையே உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் மற்றொரு முக்கியமான ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றுள்ளது. அதாவது பாகிஸ்தான் எல்லையில் இந்திய மாநிலங்களான ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகியவற்றில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தப்படக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே அங்குள்ள விமான நிலையங்களின் பாதுகாப்பை அதிகரிப்பது தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதில் எல்லைப்பாதுகாப்புப் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் இயக்குநர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    ஒருபக்கம் எல்லையைத் தாண்டி தாக்குதல் நடத்துவது என்று ஆலோசனை, மறுபக்கம் எதிரி நாடு நம் மீது தாக்குதல் நடத்தினால் அதனை எதிர்கொள்ள வியூகம் என்று மத்திய அரசு பஹல்காம் தாக்குதலுக்கு படுபயங்கரமாக எதிர்வினை ஆற்றி வருகிறது.

    Amit Shah Home Ministry India Indian Army Indian Defence Intelligence Review Military Leadership National Security Rajnath Singh Security Meeting India Tri-Services Chiefs
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதோனி தொடர்ந்த மானநஷ்டஈடு வழக்கு… இந்தி செய்தி தொலைக்காட்சியின் மனு தள்ளுபடி…
    Next Article Art can wait…India comes first.. Thuglife செய்த கமல்ஹாசன்..
    Editor TN Talks

    Related Posts

    புயலால் பாதித்த இலங்கைக்கு இந்தியா ரூ.4 ஆயிரம் கோடி நிதியுதவி!

    December 23, 2025

    டெல்லியில் எதிரொலித்த வங்கதேச வன்முறை!. யூனுஸ் உருவ பொம்மை எரித்து போராட்டம்!.

    December 23, 2025

    ராகுல் காந்தி பொய் பிரசாரங்களின் தலைவர்; நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர்!. கடும் விமர்சனம்!

    December 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியீடு!

    ‘ஜனநாயகன்’ வெளியாவதில் சிக்கல்..? காரணம் என்ன?

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    ‘ஜனநாயகன்’ ஆடியோ விழாவில் அரசியல் பேசத் தடை?

    குளிர்கால ஒலிம்பிக் விழாவின் ஜோதியை ஏந்திச் சென்றார் ஜாக்கி சான்!

    Trending Posts

    ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியீடு!

    December 23, 2025

    ‘ஜனநாயகன்’ வெளியாவதில் சிக்கல்..? காரணம் என்ன?

    December 23, 2025

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    December 23, 2025

    ‘ஜனநாயகன்’ ஆடியோ விழாவில் அரசியல் பேசத் தடை?

    December 23, 2025

    குளிர்கால ஒலிம்பிக் விழாவின் ஜோதியை ஏந்திச் சென்றார் ஜாக்கி சான்!

    December 23, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.