Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»ராணுவம் பற்றி வார்த்தை விட்ட செல்லூர் ராஜூ.. வலுக்கும் கண்டனம்…
    இந்தியா

    ராணுவம் பற்றி வார்த்தை விட்ட செல்லூர் ராஜூ.. வலுக்கும் கண்டனம்…

    Editor TN TalksBy Editor TN TalksMay 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    750x450 755019 untitled
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ராணுவ வீரர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ராணுவ வீரர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் பாங்கரவாதிகளின் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரிக்க, அமெரிக்கா தலையீடின் படி இரு நாடுகளும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தாக்குதலை முடிவுக்கு கொண்டு வந்தனர். பாகிஸ்தானின் அத்துமீறிய டிரோன் தாக்குதல்களை இந்திய ராணுவம் முறியடித்த காட்சிகளும் இணையத்தில் வைரலானது. இந்திய ராணுவ வீரர்களின் சாதனை அளப்பரியது என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பாராட்டு தெரிவித்தனர்.

    இதனிடையே இந்திய ராணுவத்திற்கு மரியாதையை செலுத்தும் விதமாக சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
    இதனை விமர்சிக்கும் விதமாக, பிரதமர் மோடிக்கு தான் திமுகவினர் நன்றி செலுத்த வேண்டுமே தவிர இந்திய ராணுவத்திற்கு அல்ல, என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருந்தது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
    மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “ராணுவ வீரர்கள் என்ன எல்லையில போய் சண்டையா போட்டாங்க? போருக்கு தேவையான தொழில்நுட்பங்களையும், கருவிகளையும் வாங்கிக் கொடுத்தது மத்திய அரசு தான்.”பாதுகாப்புத்துறை அமைச்சர் , உள்துறை அமைச்சர் ஆகியோர் கேட்ட ஆயுதங்களை பிரதமர் மோடி வாங்கிக் கொடுத்தார். எனவே திமுகவினர் பிரதமர் மோடியைதான் பாராட்ட வேண்டும். இவர்களின் நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்” செல்லூர் ராஜு தெரிவித்தார்.

    செல்லூர் ராஜூவின் இத்தகைய கருத்தை கண்டித்து கரூரில் முன்னாள் ராணுவத்தினர் போராட்டம் நடத்தினர். எல்லை வீரர்களை விமர்சித்த செல்லூர் ராஜு தனது பேச்சை திரும்ப பெற்று பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் மீண்டும் அவர் தேர்தலில் நின்றால் அவருக்கு எதிராக அவரது தொகுதியில் பிரசாரம் செய்வோம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியுள்ளனர். அதேப் போல அரியலூரிலும், செல்லூர் ராஜூவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். செல்லூர் ராஜூவுக்கு எதிராக தமிழ்நாடு முன்னாள் மத்திய ஆயுதப்படை நல மற்றும் மறுவாழ்வு சங்கமும் போராட்டம் அறிவித்துள்ளது.

    sellur raju
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபல்கலை. வேந்தரை அரசே நியமிக்கும் விவகாரம்…. மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
    Next Article துருக்கி ஆதரவு பெற்ற பாகிஸ்தானுக்கு பதிலடி: துருக்கி ஆப்பிள்கள் புறக்கணிப்பு — புனே வியாபாரிகளின் தேசபக்தி நடவடிக்கை!!
    Editor TN Talks

    Related Posts

    யார் இந்த AjayRastogi ?

    October 13, 2025

    கரூர் சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு எதிரான மனுவில் இன்று விசாரணை

    October 10, 2025

    அந்தரங்க வீடியோக்களை டெலிட் செய்ய நடவடிக்கை – மத்திய அரசு

    October 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.