இஸ்ரோவின் LVM -3 என்ற பாகுபலி ராக்​கெட் மூலம் அமெரிக்காவின் ‘புளூபேர்ட்-6’ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்​திய விண்​வெளி ஆய்வு நிறு​வனமான இஸ்​ரோ, உள்நாட்டு தேவை மற்றும் வளர்ச்சிக்கான செயற்கைக்கோளுடன் வணி​க ரீ​தியாக​வும் செயற்கைக்​கோள்​களை விண்​ணில் நிலைநிறுத்தி வரு​கிறது. அதன்​படி அமெரிக்​கா​வின் AST ஸ்பேஸ்​ மொபைல் நிறு​வனத்​தின் புளூபேர்ட்-6 எனும் நவீன தகவல்​தொடர்பு செயற்​கைக்​கோளை, இஸ்​ரோ​வின் LVM -3 ராக்​கெட் மூலம் செலுத்த திட்டமிடப்பட்டது. இதற்​கான புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டது.

இந்தநிலையில், ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து இன்று (டிச. 24) காலை 8.54 மணிக்கு பாகுபலி ராக்கெட்டான LVM- 3 மூலம் புளூபேர்ட்-6 செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது.  43.5 மீட்டர் உயரமும், 640 டன் எடை கொண்ட ராக்​கெட் LVM- 3 என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 6.5 டன் எடை கொண்ட ‘புளூபேர்ட்-6′ என்ற செல்போன் சேவைக்கான செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு உள்ளது. விண்​வெளி​யில் இருந்து நேரடி​யாக செல்​போன்களுக்கு அதிவேக இணைய சேவையை வழங்​கு​வது​தான் இந்த செயற்​கைக்​கோளின் பிர​தான நோக்​க​மாகும். இதன்மூலம் செல்​போன் டவர்​கள் இல்​லாத அடர்ந்த காடு​கள், மலைப்பகு​தி​களி​லும் 5ஜி வேகத்​தில் இணை​யம், வீடியோ அழைப்​பு​கள், குறுஞ்​செய்தி சேவை​களைப் பெற முடியும்.

ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இஸ்ரோ இது​வரை விண்​ணில் செலுத்​தி​ய​திலேயே இது​தான் அதிக எடை​யுள்ள செயற்கைக்​கோள் என்​பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version